செய்தி விளையாட்டு

ODI தொடரை வெல்லும் முனைப்புடன் இலங்கை களத்தில்!

  • June 5, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் ()7) நடைபெறவுள்ளது. ஜமைக்கா, கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இப்போட்டி இடம்பெறவுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இப்போட்டியில நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் […]

அரசியல் இலங்கை செய்தி

“புலிகள் அமைப்பின் கொள்கைகளை ஊக்குவிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது” – நாமல்

  • June 5, 2026
  • 0 Comments

“உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசாரங்களின் போது, தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் விடுதலைப்புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களைப் பயன்படுத்திய போதும், பகிர்ந்துகொண்ட போதும் ஏன் அவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்பதை அரசு விளக்க வேண்டும்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பாடகர் ஒருவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய பாடலைப் […]

அரசியல் இலங்கை செய்தி

வடக்கு மாகாணத்துக்கு பொலிஸ், காணி அதிகாரம் வழங்குவது ஆபத்து: மஹிந்த அணி கொதிப்பு!

  • June 5, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணசபைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் தேசத்துரோக நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுக்கமாட்டார் என நம்புகின்றோம் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் பிரச்சினை இல்லை. ஆனால் தேர்தலை நடத்தி வடக்கு மாகாணசபைக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கினால்தான் பிரச்சினை ஏற்படும். இலங்கையில் இதுவரை ஆட்சிபுரிந்த எந்தவொரு ஜனாதிபதியும் இந்த வேலையை (பொலிஸ், […]

இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 08 மனித எலும்புக்கூடுகள் இன்று கண்டுபிடிப்பு!

  • June 4, 2026
  • 0 Comments

செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வின் மூன்றாம் கட்டத்தின் 16ஆம் நாளான இன்றைய (4) பணிகளின்போது மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் மூன்று கட்டங்களிலும் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 283ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் 279 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும், எலும்புக்கூடு இலக்கங்கள் 266 மற்றும் 261 ஆகியவற்றுடன் தொடர்புடைய மனித எச்சக் குவியலில் இன்று (4) புதிதாக இலக்கம் இடப்பட்ட 274ஆம் எலும்புக்கூட்டுடன் சேர்த்து கண்டுபிடிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டன. […]

ஐரோப்பா செய்தி

பிரிட்டனுக்குள் பிரிவினையைத் தூண்ட Elon Musk முயற்சி: பிரதமர் Keir Starmer குற்றச்சாட்டு!

  • June 4, 2026
  • 0 Comments

அமெரிக்கத் தொழிலதிபர் இலோன் மஸ்க் பிரிட்டனுக்குள் பிரிவினையைத் தூண்ட முயல்கிறார் என்று பிரதமர் கீர் ஸ்டார்மர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். பிரிட்டனின் தெற்கு நகரமான சவுதாம்ப்டனில் Southampton கடந்த டிசம்பர் மாதம் 18 வயதுடைய ஹென்றி நோவாக் என்ற மாணவர், 23 வயதுடைய விக்ரம் திக்வா என்பவரால் கத்தியால் குத்தப்பட்டார். கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான ஹென்றி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது கைகளில் விலங்கிட்ட விவகாரம் தற்போது பிரிட்டன் அரசியலில் […]

இந்தியா செய்தி

பிரதமர் மோடியை சந்தித்தார் வெனிசுலா பதில் ஜனாதிபதி!

  • June 4, 2026
  • 0 Comments

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெனிசுலா தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேச்சு நடத்தினார். அதனைத் தொடர்ந்து இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பில் மேற்படி சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன. மேலும், எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பை […]

இலங்கை செய்தி

திருமலையில் விவசாயியின் சைக்கிளை திருடியவருக்கு விளக்கமறியல்!

  • June 4, 2026
  • 0 Comments

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை, திருடிச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மொரவெவ கமநல சேவைகள் திணைக்களத்தில் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக சென்ற விவசாயி ஒருவரின் மோட்டார் சைக்கிளே இவ்வாறு களவாடப்பட்டிருந்தது. மோட்டார் சைக்கிள் உரிமையாளர் , பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் CCTV காட்சிஉதவியுடன் […]

இலங்கை செய்தி

தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல்: தவிசாளரிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார்!

  • June 4, 2026
  • 0 Comments

தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடுகள் தொடர்பில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோப்பாய் பொலிஸாரினால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் வித்தாக நஞ்சருந்தி தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகி பொன். சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு, உரும்பிராயில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலையடியில் நாளை வெள்ளிக்கிழமை காலை 8:00 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. […]

இலங்கை செய்தி

சொல்லிசை கலைஞர் சங்கீதன் சார்பில் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு!

  • June 4, 2026
  • 0 Comments

கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசை கலைஞர் சங்கீதன் சார்பில், உடனடியாக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சொல்லிசை கலைஞர் சங்கீதனை இன்று நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் சொல்லிசை கலைஞரான சங்கீதன், அண்மையில் விடுதலைப்புலிகளின் பாடலொன்றை மீளுருவாக்கம் செய்து பாடினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பாதுகாப்புப் […]

இலங்கை செய்தி

முதியோர் இல்ல தீ விபத்து: பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு! பணிப்பாளர் கைது!

  • June 4, 2026
  • 0 Comments

ஹெரணை, அங்குருவாதொட்ட, பட்டகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. எரிகாயங்களுக்கு உள்ளான 07 பேர் ஹெரனை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். மேலும் மூவரைக் காணவில்லை. தீ விபத்து ஏற்பட்டவேளை அங்கு சுமார் 72 பேர்வரை இருந்துள்ளனர் என தெரியவருகின்றது. அதேவேளை, இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக, முதியோர் இல்லத்தின் பணிப்பாளர் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இன்று (04) ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]