இலங்கை செய்தி

படகு கவிழ்த்து அதிபர் பலி: யாழில் சோகம்!

  • May 29, 2026
  • 0 Comments

யாழ். நயினாதீவு கடற்பரப்பில் சிறிய படகில் பயணித்த போது ஏற்பட்ட திடீர் விபத்தில் சிக்கி, பாடசாலை அதிபர் ஒருவர் கடலில் வீழ்ந்து நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நயினாதீவை வசிப்பிடமாகக் கொண்ட, நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகா வித்தியாலயத்தின் அதிபரான நடராசா மயூரன் (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், அண்மையில்தான் புங்குடுதீவிலிருந்து இடமாற்றம் பெற்று நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகா வித்தியாலயத்தின் அதிபராகப் பொறுப்பேற்றிருந்தார். சம்பவ தினமான […]

செய்தி விளையாட்டு

இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணி எது?

  • May 29, 2026
  • 0 Comments

IPL தொடரில் இன்று (29) நடைபெறும் 2 வது தகுதிச்சுற்று (Qualifier 2) ஆட்டத்தில் ராஜஸ்தான் , குஜராத் ஆகிய அணிகள் மோதுகின்றன. நியூ சண்டிகார் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால், இரு அணிகளுக்கும் இடையேயான இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே-ஆப் சுற்றுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மே 27 ஆம் […]

உலகம் செய்தி

‘அமைதி முயற்சி’ – நாளை அமெரிக்கா பறக்கிறார் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்!

  • May 28, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் தார் (Ishaq Dar) நாளை (29) வெள்ளிக்கிழமை வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொள்கின்றார். இதன்போது அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவைச் (Marco Rubio) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஈரானுடனான அமெரிக்க – இஸ்ரேலியப் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கு பாகிஸ்தான் ராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது. பாகிஸ்தான் பிரதிநிதிகள் சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். […]

உலகம் செய்தி

போர் நிறுத்தத்துக்கு மத்தியிலும் தாக்குதல்: 906 பாலஸ்தீனர்கள் பலி!

  • May 28, 2026
  • 0 Comments

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 72,803 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 172,885 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீன சுகாதார அமைச்சின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஒக்டோர் 7 ஆம் திகதி முதல் 2026 மே 26 ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே குறித்த இன அழிப்பு இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையில் கடந்த வருடம் ஒக்டோபர் 10 ஆம் திகதி போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. எனினும், போர்நிறுத்த விதிமுறைகளைமீறி […]

உலகம் செய்தி

ஈரானுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா!

  • May 28, 2026
  • 0 Comments

ஈரான்மீது புதிய மற்றும் கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகளை அமெரிக்க திறைசேரி விதித்துள்ளது. இதற்கமைய ஈரானின் கடல்சார் அமைப்பான PGSA உடன் வணிகம் செய்பவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அந்த அமைப்பை அங்கீகரிக்க மறுத்துள்ளது. குறிப்பாக, ஈரானிய விமான நிறுவனங்கள் சர்வதேச அளவில் தரையிறங்குவதையும் எரிபொருள் நிரப்புவதையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. ஈரானின் வருமான ஆதாரங்களை முடக்குவதன் மூலம் அந்த நாட்டை பேச்சுவார்த்தைக்கு வரவழைப்பதே இந்தத் தடைகளின் முக்கிய நோக்கமாகும் என சுட்டிக்காட்டப்படுகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

காங்கிரஸ் தலைவர்களை ஜுன் 11 இல் சந்திக்கின்றார் முதல்வர் விஜய்!

  • May 28, 2026
  • 0 Comments

காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் எதிர்வரும் ஜுன் 11 ஆம் திகதி தமிழக முதல்வர் சந்திக்கவுள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். டெல்லிக்கு நேற்று பயணம் மேற்கொண்ட முதல்வர் விஜய், பிரதமர் மோடியை சந்தித்து பேச்சு நடத்தினார். காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவில்லை. இது தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் வெளியாகின. இந்நிலையிலேயே ஜூன் 11-ம் திகதி முதல்வர் விஜய் டெல்லி வருகிறார். அப்போது அவர் […]

அரசியல் இலங்கை செய்தி

“கட்சி தாவினால் எம்.பி. பதவி பறிப்பு”: சட்டமூலத்தின் பின்னணி என்ன?

  • May 28, 2026
  • 0 Comments

“அரசாங்கம் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. எனவேதான் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளில் இணைவதை தடுக்கும் நோக்கில் கட்சி தாவினால் எம்.பி. பதவி பறிபோகும் சட்டமூலம் அவசரமாக கொண்டுவரப்படுகின்றது.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான கூறியவை வருமாறு , “அரசாங்கத்தின் தற்போதைய பயணம் தவறு என்பது திசைக்காட்டியிலுள்ள கல்வி பின்புலம் உடைய எம்.பிக்களுக்கு தெளிவாக புரிகின்றது. எனவே, இவர்கள் […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் இஸ்ரேல் ஊழித்தாண்டவம்!

  • May 28, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்டு வரும் தீவிரமான வான்வழித் தாக்குதல்களால் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களால் Tyre போன்ற முக்கிய நகரங்களில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்துள்ளது. தெற்கு லெபனானில் எல்லையோரப் பகுதிகளில் இரு தரப்பினரும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் குற்றம் சாட்டும் வேளையில், அங்குள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். […]

செய்தி விளையாட்டு

ஈரான் வீரர்களுக்குரிய விசாவை உறுதி செய்யுமாறு FIFA விடம் கோரிக்கை!

  • May 28, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக, தமது நாட்டு வீரர்களுக்கு அமெரிக்கா multiple-entry visa வழங்குவதை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) உறுதி செய்ய வேண்டும் என ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. ஈரான் கால்பந்து அணி மெக்சிகோவின் டிஜுவானா நகரில் தங்கி பயிற்சி பெற திட்டமிட்டுள்ளதால், அங்கிருந்து அமெரிக்காவிற்குள் எளிதாக வந்து செல்ல இந்த விசா அவசியம் எனக் கருதப்படுகிறது. பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் விசா சிக்கல்களைத் தவிர்க்கும் நோக்கில், ஈரான் தனது பயிற்சி முகாமினை அமெரிக்காவின் அரிசோனாவிலிருந்து […]

செய்தி

பதிலடி: அமெரிக்கா வான்படை தளத்தை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்!

  • May 28, 2026
  • 0 Comments

தெற்கு ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க வான்படைத் தளம் ஒன்றை இலக்கு வைத்து தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அறிவித்துள்ளது. தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவத் தளம் எந்த நாட்டில் அமைந்துள்ளது என்ற விபரத்தை ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) வெளிப்படையாக அறிவிக்கவில்லை. எனினும், அமெரிக்க ராணுவத் தளத்தைக் கொண்டுள்ள அண்டை நாடான குவைத், தனது வான்பரப்பில் நுழைந்த “பகைமை ஏவுகணைகள் […]