“அதிக பகுத்தறிவுள்ளவர்” : மொஜ்தபா கமெனியை பாராட்டிய ட்ரம்ப்!
ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி (Mojtaba Khamenei), தனது முன்னோடியை விட “அதிக பகுத்தறிவுள்ளவர்” என்று தாம் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், கமெனி “மிகவும் மோசமாகக் காயமடைந்துள்ளார்” என்றும் அவர் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அந்த பேட்டியில் மேலும் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், இளவயதினராக இருப்பதால், அதிக பகுத்தறிவுள்ளவர் என்று நான் நினைக்கிறேன்.
அவர் மிகவும் மோசமாகக் காயமடைந்துள்ளார். எனவே, அவரிடம் ஒருவித துணிச்சல் இருக்கிறது,” என்றார்.
இதேவேளை போரின் முதல் நாளில் தனது தந்தையைக் கொன்ற இஸ்ரேலியத் தாக்குதலில் காயமடைந்ததிலிருந்து, தனது தந்தை அயதுல்லா அலி கமெனிக்குப் பிறகு பதவியேற்ற இந்தப் புதிய தலைவர் பொதுவெளியில் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




