கொட்டகல மற்றும் கினிகத்தேன பகுதிகளில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்கள் மீட்பு
கொட்டகல மற்றும் கினிகத்தேன பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த குடும்பத்தினர் இன்று பிற்பகல் இராணுவத்தினரால் மீட்கப்பட்ட நிலையில் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஹட்டனில் இருந்து நாவலப்பிட்டிய நோக்கிப் பாயும் ஹட்டன் ஓயா ஆறு கரைபுரண்டு ஓடியதால், இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும், அவர்களைப் பாதுகாப்பாக இடமாற்றம் செய்வதை உறுதி செய்வதற்கும் மேற்கொள்ளப்பட்ட அவசரகால மீட்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.



