வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆசைகாட்டி கோடிகளை சுருட்டிய ஆசாமி கைது!
வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாகச் சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்தி, பல கோடி ரூபா பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரை குச்சவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களால் அளிக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர், கிண்ணியா பகுதியை பிறப்பிடமாகக் கொண்டவர் என்றும், தற்போது குச்சவெளி பிரதேசத்தில் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருபவர் என்றும், நீண்ட காலமாக கொழும்பில் தங்கியிருந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. வெளிநாடுகளில் […]













