ஆப்பிரிக்கா தங்கச் சுரங்க விபத்து – பலி எண்ணிக்கை உயர்வு
ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஐ எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் கேமரூன் எல்லையருகே உள்ள ஜாம்போயே சுரங்கப் பகுதியில் நேற்று மாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரத்தின்படி நூறு பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுவதுடன், பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.



