இலங்கை செய்தி

” உண்மை வெளிவரும் நாளே எமக்கு சுதந்திரம்” வவுனியாவில் போராட்டம்!

  • February 4, 2026
  • 0 Comments

இலங்கையின் சுதந்திர தினமான இன்று , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றைய நாளை, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் கரிநாள் என நினைவு கூருகின்றோம் என  தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் கூறினர். வவுனியாவில் இன்று அவர்களது போராட்டப் பந்தலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே சங்கப் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு கூறினர். “ இலங்கைக்கு சுதந்திரம் எங்களுக்கு விடுதலையாக அமையவில்லை. அது எங்கள் குழந்தைகள் […]

இலங்கை செய்தி

“சுதந்திரம் என்பது கரிநாள் அல்ல: NPP ஆட்சியில் நம்பிக்கை பிறந்துள்ளது”

  • February 4, 2026
  • 0 Comments

” மாற்றத்துக்கான ஒரு புதிய சகாப்தத்தில் நாம் இப்போது அடியெடுத்து வைத்திருக்கின்றோம். அந்த மாற்றத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன்.” இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் N. Wethanayagan இலங்கையின் சுதந்திர நாள் உரையில் அழைப்பு விடுத்தார். இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் இன்று  (04.02.2026) கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபைக்கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிப்புரைக்கு அமைவாக […]

இலங்கை செய்தி

சிங்களவர்களிடம் நாடு கையளிக்கப்பட்டதிலிருந்து தமிழருக்கு கரிநாள் -பல்கலை மாணவர்களின் எதிர்ப்பு குரலுக்கு வலுசேர்க்குமாறு கோரிக்கை

  • February 3, 2026
  • 0 Comments

நாட்டை பிரித்தானியர்கள் சிங்களவர்களிடம் கையளித்ததில் இருந்து தொடர்ச்சியாக தமிழர்கள் இந்த நாளை கரிநாளாக அனுஷ்டித்து வருவதாக தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் பல்கலைக்கழக மாணவர்கள்,காணாமல் போன உறவுகள் , மற்றும் பொது அமைப்புக்கள் முன்னெடுத்து வரும் கரிநாள் போராட்டத்திற்கு மக்கள் வலுச்சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழர் […]