அரசியல் இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

சுரேஷ் சலேவின் தகவல்கள் ‘புலி டயஸ்போராக்களிடம்’ சிக்கலாம்: பதறுகிறது மஹிந்த அணி

சுரேஷ் சலே என்பவர் பயங்கரவாதி அல்ல. பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய புலனாய்வுப் பிரிவுக்குத் தலைமை வகித்த ஓர் அதிகாரி ஆவார். எனவே, அவரை ஒரு பயங்கரவாதியைப் போல நடத்தக்கூடாது.

“சுரேஷ் சலேவிடம் உள்ள உளவுத் தகவல்களை, ஏதேனும் ஒரு விசாரணை அதிகாரி பணத்திற்காகப் புலி டயஸ்போராக்களுக்கு விற்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லாமல் இல்லை.

எனவே, தேசிய பாதுகாப்பைச் சுரேஷ் சலே காட்டிக்கொடுக்காமல் இருப்பது பெருமையளிக்கின்றது” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:

“மிலேனியம் சிட்டி (Millennium City) சம்பவம் நினைவிருக்கலாம் அல்லவா? அதுதொடர்பான தகவல்கள் வெளியான பின்னர், வடக்கிலிருந்து இராணுவத்திற்குத் தகவல் வழங்கியவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்; அதனுடன் தொடர்புடைய படையினரும் கொல்லப்பட்டனர்.

எனவே, சுரேஷ் சலேவிடம் உள்ள தகவல்களை நீதிமன்ற உத்தரவைப் பெற்று மட்டுமே பெற வேண்டும். ஏனெனில், நீதிமன்ற உத்தரவை எவராலும் மீற முடியாது.

சுரேஷ் சலே என்பவர் பயங்கரவாதி அல்ல. பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய புலனாய்வுப் பிரிவுக்குத் தலைமை வகித்த ஓர் அதிகாரி ஆவார். எனவே, அவரை ஒரு பயங்கரவாதியைப் போல நடத்தக்கூடாது.

சுரேஷ் சலேவின் மடிக்கணினி (Laptop) மற்றும் தொலைபேசியில் உள்ள தகவல்களை ஏதேனும் ஒரு பொலிஸ் அதிகாரி பகிரங்கப்படுத்தினால், அது நாட்டிற்கே ஆபத்தாக முடியும்.

சில வேளைகளில், பணத்திற்காக அந்தத் தகவல்களைப் புலி டயஸ்போராக்களுக்கு விற்கக்கூடிய சாத்தியக்கூறுகளும் இல்லாமலில்லை.

இதன் காரணமாகவே, நீதிமன்ற உத்தரவைப் பெற்று, பொறுப்பு வாய்ந்த ஓர் அதிகாரியிடம் அதனை ஒப்படைக்க வேண்டும் என்கிறோம். அவ்வாறு முறையாக நடந்தால், அனைத்துத் தகவல்களையும் சுரேஷ் சலே வெளிப்படுத்துவார் என நம்புகின்றோம்” என்றார் சாகர காரியவசம்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை