பாகிஸ்தானில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல் – 16 பேர் பலி
வடமேற்கு பாகிஸ்தானின் கோஹாட் மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய வளாகத்தை குறிவைத்து தற்கொலைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில் 05 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 11 பொதுமக்கள் உள்ளடங்களாக 16 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத சடங்குகளில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவினரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பிறகு அந்த இடத்திற்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்தியவர்கள் குழுவும் தாக்குதல்களை முன்னெடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





