ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரம் – உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாமர்!
ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக, இங்கிலாந்தும் பிரான்சும் ஒரு பன்னாட்டுப் பணிக்குத் தலைமை தாங்கும் என்று சர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், ‘சூழ்நிலைகள் அனுமதித்தவுடன்’ தொடங்கப்படவுள்ள இந்தப் பணி, முற்றிலும் அமைதியான மற்றும் தற்காப்பு சார்ந்ததாக இருக்கும்.
வணிகக் கப்பல் போக்குவரத்திற்கு நம்பிக்கையளிப்பதும், ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதும் இதன் முதன்மை நோக்கங்களாகும்.
உலகளாவிய வர்த்தகத்தில் ஆர்வம் கொண்ட அனைத்து நாடுகளும் இதில் சேர அழைக்கப்படுகின்றன. பல நாடுகள் ஏற்கனவே பங்களிப்புகளை வழங்க முன்வந்துள்ளன” எனக் கூறியுள்ளார்.





