இலங்கை: கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி
Mandatory Credit: Photo by M A Pushpa Kumara/EPA/Shutterstock (7965955a)
A Sri Lanka Police Officer Searches For Evidence While an Armed Policeman Stands Guard at Journalist Mandana Ismail Abeywickremas Home Following a Shooting of Intruders This Morning at Her Residence in Bambalapitiya in Colombo Sri Lanka 24 August 2013 Five Armed Men Earlier the Day Invaded the Home of Abeywickrema a Journalist of Sri Lanka Newspaper ‘Sunday Leader’ Police Stormed the House and Shot Dead One of the Intruders It Has Been the Latest in a Series of Incidents Involving Staff of the Newspaper Sri Lanka Colombo
Sri Lanka Crime Shooting Abeywickrema – Aug 2013
கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் பயணித்துக் கொண்டிருந்த போது இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மிஹிஜய செவன பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர்கள் காரில் வந்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.






