உலகம்

துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – இராப்போசன விருந்து இரத்து!

வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவானதை தொடர்ந்து இரவு நேர விருந்து நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது.

இரகசிய சேவை அதிகாரி மீது மேற்படி துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதுடன், தற்போது அந்த அதிகாரி நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் கலிபோர்னியாவின் டொரன்ஸைச் சேர்ந்த 31 வயதான கோல் தாமஸ் ஆலன் என்பவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

வன்முறைக் குற்றத்தின் போது துப்பாக்கியைப் பயன்படுத்தியது மற்றும் ஒரு கூட்டாட்சி அதிகாரியைத் தாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

தாக்குதலுக்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!