செய்தி விளையாட்டு

6 உலகக் கோப்பைத் தொடர்களிலும் கோல் அடித்து ரொனால்டோ வரலாற்று சாதனை

Portugal's Cristiano Ronaldo celebrated in his signature style after scoring against Uzbekistan

உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்களை அடித்து, உலகக்கிண்ண தொடரில் கோல் வேட்டையை ஆரம்பித்துள்ளார் ரொனால்டோ.

ரொனால்டோவின் ஆட்டம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், கோல் அடிப்பதில் தனக்கிருக்கும் அபார திறமை இன்னும் குறைந்துவிடவில்லை என்பதை இதன்மூலம் ரசிகர்களுக்கு நினைவூட்டியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியில் போர்ச்சுகல் அணி 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இதில் முதல் பாதியில் ரொனால்டோ இரண்டு கோல்களை அடித்தார். இது அவருக்கும், அவரது அணிக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

ஏனெனில், தங்களது முதல் போட்டியில் காங்கோ ஜனநாயகக் குடியரசு அணிக்கு எதிராக 1-1 என்ற கணக்கில் ஏமாற்றமளிக்கும் வகையில் சமன் செய்ததைத் தொடர்ந்து, போர்ச்சுகல் அணி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தது.

ரொனால்டோ, இப்போது தனது கணக்கில் இரண்டு கோல்களைச் சேர்த்துள்ளார். இதன்மூலம் ஆறு உலகக் கோப்பைத் தொடர்களில் கோல் அடித்த வரலாற்றின் முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

மேலும், போர்ச்சுகல் அணியின் பழம்பெரும் வீரர் யூசெபியோவின் (Eusebio) சாதனையை முறியடித்து, உலகக் கோப்பை வரலாற்றில் போர்ச்சுகல் அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி