இலங்கையின் இறையாண்மைக்கு மதிப்பளிப்பு: அமெரிக்கா உறுதி!
3D Waving Sri Lanka and USA Flags on Blue Sky with Sun Shine
ஈரான் கப்பல் விவகாரத்தில் இலங்கைக்கு Sri Lanka அமெரிக்கா US அழுத்தங்களை பிரயோகிக்காது என அந்நாட்டு இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சர்வதே ஊடகமொன்று இந்த தகவலை உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது.
இது விடயம் தொடர்பில் இலங்கையின் இறையாண்மை மதிக்கப்படும் எனவும் அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களை மீண்டும் அந்நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துள்ளது என முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையிலேயே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.





