இலங்கை செய்தி

இலங்கையில் ஆராய்ச்சிகள் தொடரும்!!! நாசா விஞ்ஞானிகள்

இந்த நாட்டில் செவ்வாய் கிரகத்துக்கு நிகரான பாறைகள் உள்ளதா என்பதை கண்டறிய நடத்தப்பட்ட ஆராய்ச்சி தொடரும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தின் பரிணாம வளர்ச்சி குறித்து தற்போது ஆய்வுகள் நடைபெற்று வருவதாக அதன் மூத்த விஞ்ஞானி சுனிதி கருணாதிலேகா தெரிவித்தார்.

நாசாவுடன் இணைந்து பல சோதனைக் குழுக்கள் தற்போது அம்பலாந்தோட்டை மற்றும் உஸ்ஸங்கொட பகுதிகளில் பாறை சோதனையில் ஈடுபட்டுள்ளன.

உஸ்ஸங்கொட மலையின் பாறைகள் செவ்வாய் கிரகத்தைப் போன்றதா என்பதைக் கண்டறிவதே இவர்களின் முக்கிய நோக்கமாகும்.

இந்த நாட்டில் செவ்வாய் கிரகத்தின் பாறைகளை ஒத்ததாக கருதக்கூடிய பாறைகள் உள்ள இடங்களை சரிபார்க்கும் வேலைத்திட்டத்தின் கீழ், உஸ்ஸங்கொட மலைக்கு அருகில் உள்ள இடம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

நாசா மற்றும் பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் இலங்கையின் ஏனைய பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி குழுவும் இதில் இணைந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தின் நிலை தொடர்பாக தொலைதூரத்தில் நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில், பாறைகளுக்கு நிகரான பாறைகள் உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக நாசாவுடன் இணைந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக பேராதனை பல்கலைக்கழக புவி அறிவியல் துறையின் கலாநிதி பிரசன்ன லக்ஷிதா தெரிவித்தார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை