ஜெர்மனியில் MPகளின் சம்பளத்தின் பெறும்பகுதியை சமூக நிதிகளுக்கு வழங்க முன்மொழிவு
ஜெர்மனியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சம்பளத்தின் பெறும்பகுதியை சமூக நிதிகளுக்கு நன்கொடையாக வழங்கக் கட்டாயப்படுத்தும் சட்டத்திருத்தம்மொன்றில் வாக்கவுள்ளதாக தகவல் வௌயாகியுள்ளது.
சோசலிச இடதுசாரிக் கட்சி, இந்த வாக்கெடுப்பை முன்மொழிந்துள்ளது.
இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சராசரி பொது சேவை சம்பளத்திற்கு இணையாகக் கணக்கிடப்பட்ட ஊதியத்தை மட்டுமே தக்கவைத்துக்கொள்வார்கள்.
கோடைக்காலத்தில் இடம்பெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இறுதி அமர்வின்போது இது தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாதத்திற்கு சுமார் €11,833.47 யூரோவை ஊதியமாக பெறுகிறார். அத்துடன் பொதுச் செலவுகளுக்காக €5,467 யூரோ வழங்கப்படுகிறது.
இந்நிலையில் புதிய முன்மொழிவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக வரியை செலுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த முன்மொழிவிற்கு குறைந்த அளவிலான உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த முன்மொழிவு திறமையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற வாய்ப்பளிக்கும் என்றும், ஒரு சட்டமன்ற உறுப்பினர் வழக்கமான சம்பளத்தில் திறம்படச் செயல்படுவார் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.




