உலகம் செய்தி

பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பிரபல வங்கதேச பத்திரிகையாளர்

Prominent Bangladeshi journalist arrested on terrorism charges

நாட்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் டாக்கா(Dhaka) பெருநகர காவல்துறையினரால் வங்கதேச(Bangladesh) பத்திரிகையாளர் அனிஸ் ஆலம்கீர்(Anis Alamgir) கைது செய்யப்பட்டுள்ளார்.

டாக்காவில் உடற்பயிற்சி கூடத்திலிருந்து வெளியேறிய பிறகு, ஆலம்கீரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தர பாசிம்(Uttara Paschim) காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், பத்திரிகையாளர் பலத்த பாதுகாப்பின் கீழ் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி பேச்சு நிகழ்ச்சிகள் மூலம் நாட்டை சீர்குலைக்கவும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளை மீண்டும் உயிர்ப்பிக்கவும் சதி செய்ததாக ஆலம்கீர் மற்றும் நான்கு பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்நிலையில், ஆலம்கீரின் கைது நடவடிக்கை பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமைகள் குழுக்களிடையே சீற்றத்தைத் தூண்டியுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி