இலங்கை

வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வடக்கு கிழக்கு தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (21) ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கு காணி உரிமை வழங்குதல், மீள்குடியேற்றம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான சட்டங்களை அமுல்படுத்துதல், இந்தியாவில் அகதி முகாம்களில் உள்ள இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மாவட்ட அபிவிருத்தி சம்பந்தமான பல விடயங்களும் இதன்போது கவனத்தில் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. .

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர்.சம்பந்தன், எஸ்.இராசமாணிக்கம், ஜி.கருணாகரன், .டி. கலை அரசன், குலசிங்கம் திலீபன் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content