இலங்கை

மனு தள்ளுபடி – சிறை செல்கிறார் ஞானசார தேரர்!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

தண்டனையிலிருந்து தன்னை விடுவித்துக் கோரி ஞானசார தேரோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த  நீதிபதி மஞ்சுல திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டி, ஞானசார தேரோ மீது பொலிஸார் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

விசாரணையைத் தொடர்ந்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஞானசார தேரரை குற்றவாளி எனக் கண்டறிந்து,  அவருக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்