பேராதனை பல்கலைக்கழக மாணவன் மாயம்
பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 3 ஆம் வருட மாணவன் காணாமல் போயுள்ளார்.
மாணவனை தேடி வருவதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவன் அம்பாறை – சேரகம வெருன்கட்டிகொடவைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவன் பேராதனை பல்கலைக்கழகத்தின் அக்பர் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மாணவனைத் தேடும் நடவடிக்கையை பேராதனைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 12 times, 1 visits today)