இலங்கை

மக்கள் வீதிகளில் இறங்கி அரசாங்கத்துக்கு எதிராக போராட வேண்டும் : புதிய மார்க்சிச லெனின் கட்சி

”இந்த அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். மக்கள் வீதிகளில் இறங்கி இந்த அரசாங்கத்துக்கு எதிராக போராட வேண்டும். மக்கள் நலன் இல்லாத இந்த அரசாங்கம் தேவையில்லை” என புதிய மார்க்சிச லெனின் கட்சியின் பொதுச்செயலாளர் சி கா செந்தில் வேல் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ளதாவது, .

”ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கொண்டுவரப்பட்ட பட்ஜெட்டில் மக்கள் நலன் சார்ந்த எந்த திட்டங்களும் இல்லை.

யானை பசிக்கு சோளப்பொறி என்ற கதை போல் அவரது பட்ஜெட் அமைந்துள்ளது.

எந்த வித திட்டமிடலும் இல்லாமல் இந்த அரசாங்கம் புதிய பட்ஜெட்டில் மக்களை ஏமாற்ற நினைக்கின்றது.

ஆண்டாண்டு காலமாக, கே ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் இருந்து மக்கள் நலன் சார்ந்த இந்த பட்ஜெட் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. மாறாக இவர்கள் தனியார் கம்பெனிகளை வளைத்து போடுவதற்கும் அவர்களை ஊக்குவிக்கவுமே இந்த திட்டங்களை கொண்டு வருகின்றார்கள்.

இந்த அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தை திருப்தி படுத்துவதற்காக இந்த புதிய பட்ஜெட்டை தயாரித்துள்ளது ஒழிய இது மக்கள் நலன் சார்ந்த பட்ஜெட் ஆக இருக்கவில்லை.

நேற்றைய தினம் உச்ச நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பினை வழங்கி இருக்கின்றது. இந்த நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலைமை அடைந்ததற்கு பசில், மஹிந்த ராஜபக்ஷ ,முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாரகாப்ரல் ஆகியோரே காரணம் எனத் திட்டத் தெளிவாக கூறியிருக்கின்றது.

ஆண்டாண்டு காலமாக இந்த அரசாங்கம், கொண்டுவரும் பொருளாதாரத் திட்டங்கள் அனைத்துமே அடித்தட்டு மக்களின் நலன் சார்ந்ததாக அமைந்திருக்கவில்லை.

மாறாக அது மேல்வர்க்கத்தினரை , திருப்தி படுத்தவும் அவர்களுடைய கண்ணோட்டத்திலுமே இவர்களுடைய பொருளாதாரத் திட்டங்கள் அமைந்தது.

எனவே தான் எங்களுடைய கட்சி கூறுகின்றது மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும்.

இந்த ரணில் ராஜபக்ச அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்” என்றார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content