இலங்கை

நுகேகொடை கூட்டம்: ரவிக்கு கதவடைப்பு?

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்குமாறு தமக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கடந்த பொதுத்தேர்தலில் புதிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் ஆசனம் ஊடாக ரவி கருணாநாயக்க நாடாளுமன்றம் வந்தார்.

குறித்த கட்சியின் உரித்து ரவி கருணாநாயக்க வசம் இருப்பதால் இரு தேசியப்பட்டியல் ஆசனங்களில் ஒன்றை தனதாக்கிக்கொண்டார். இதனால் அவருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் உள்ளக மோதல் ஏற்பட்டது.

எனினும், ரவி கருணாநாயக்க தன்னை இன்னும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராகவே அடையாளப்படுத்திவருகின்றார். ஆனால் கட்சிக்குள் உள்ள சிலர் தனக்கு எதிராக சதி செய்வதாகவும், உள்ளக கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுகேகொடை கூட்டத்துக்கு என்னை அழைக்காவிட்டாலும், எதிரணிகள் செல்ல வேண்டும் எனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்