இலங்கை செய்தி

லண்டன் வருகிறார் வடக்கு ஆளுநர்

தனிப்பட்ட விஜயமாகவே வடக்கு ஆளுநர் லண்டன் செல்கின்றார் எனக் கூறப்பட்டாலும், அங்கு புலம்பெயர் தமிழர்களைச் சந்தித்து வடக்கு அபிவிருத்தி பற்றி பேச்சு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு வார கால பயணமாக லண்டன் செல்கின்றார்.

இதனால் மாகாணத்தின் நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் அவசரக் கடமைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காகக் கிழக்கு மாகாண ஆளுநர் பதில் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார்.

இதற்கமைய, ஜூலை முதலாம் திகதி முதல் ஜூலை 15ஆம் திகதி வரை வடக்கு மாகாணத்தின் மேலதிக நிர்வாகப் பொறுப்புகள் மற்றும் ஆளுநரின் கடமைகள் அனைத்தையும் கிழக்கு மாகாண ஆளுநரே கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட விஜயமாகவே வடக்கு ஆளுநர் லண்டன் செல்கின்றார் எனக் கூறப்பட்டாலும், அங்கு புலம்பெயர் தமிழர்களைச் சந்தித்து வடக்கு அபிவிருத்தி பற்றி பேச்சு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை