ஐரோப்பா

ரஷ்யாவிற்காக உயிர் தியாகம் செய்த வடகொரிய வீரர்கள் : மேலும் வீரர்களை அனுப்பும் கிம்!

உக்ரைனில் நடந்த சண்டையில் 1,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதை அடுத்து, வடகொரியா ரஷ்யாவிற்கு மேலும் படைகள் மற்றும் கமிகேஸ் ட்ரோன்களை அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜங்-உன் விளாடிமிர் புடினின் போர் முயற்சிகளுக்கு உதவ வட கொரியர்களை அனுப்பத் தொடங்கியதிலிருந்து, அவர்கள் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளனர்.

குர்ஸ்க் பகுதியில் மூன்று நாட்களில் 77 பேர் கொல்லப்பட்டதாகவும், 40 வட கொரிய வீரர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிம் ஜாங்-உன்னின் படைகள் மீது உக்ரேனிய சிறப்பு நடவடிக்கைக் குழு ரஷ்யாவிற்குள் ஒரு களத்தில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் கிராஃபிக் காட்சிகளும் வெளியாக்கியுள்ளன.

சுமார் 100 வட கொரியர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 1,000 பேர் காயமடைந்ததாகவும் தற்போது நம்பப்படும் நிலையில், தென் கொரிய உளவுத்துறை மேலும் ராணுவ வீரர்கள் அனுப்பப்படுவதாக தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்