மொட்டு இருக்கும் வரை பாசிசத்திற்கு இடமில்லை – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!
![](https://iftamil.com/wp-content/uploads/2023/07/ஜோன்ஸ்டன்-jpg.webp)
ஜே.வி.பியின் போராட்டத்தின்புாது அதில் கலந்து கொண்ட அனைவரின் கணக்குகளிலும் பணம் வரவு வைக்கப்பட்ட விதம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.
ஜே.வி.பியின் மூளையாகச் செயற்படுபவர்களின் மரபணுக்களில் கோபம், வெறுப்பு, பொறாமை, தீவைப்பு, கொலை போன்ற கலாசாரம் மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், போராட்டத்தில் இருந்து கோடீஸ்வரர்களாக மாறிய இவர்கள், இளம் தலைமுறையினருக்கு துப்பாக்கி கலாச்சாரத்தை அறிமுகம் செய்தனர்.
டொலருக்கு அடிமையான ஒரு கும்பல் நாட்டை சீரழிக்கிறது. மொட்டு இருக்கும் வரை பாசிசத்திற்கு இடமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.