உலகம்

நெதன்யாகு மீதான வழக்கு விசாரணை இரத்து!

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஊழல் வழக்கில் இந்த வாரம் நடைபெறவிருந்த விசாரணையை  ஜெருசலேம் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

“பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர” காரணங்களை மேற்கோள்காட்டி நெதன்யாகு விசாரணையை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

பெஞ்சமின் நெதன்யாகு 2019-ஆம் ஆண்டு முதல் மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.

அவரது நீதிமன்ற வருகைகள் பலமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளது.

காசா, லெபனான் மற்றும் ஈரான் மீதான இஸ்ரேலின் போர்களில் நடந்த நிகழ்வுகளுடன் இந்த ஒத்திவைப்புகளும் தடங்கல்களும் பெரும்பாலும் தொடர்புபடுத்தப்படுகின்றன.

அதேநேரம் விசாரணைகளில் கலந்துகொள்வதைத் தவிர்க்க நெதன்யாகு அவற்றை ஒரு காரணமாக பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!