இந்தியா தமிழ்நாடு

தமிழகத்தில் பிரச்சாரப்போர் நாளையுடன் ஓய்வு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சார போர் நாளை (21) மாலை 6 மணியுடன் முடிவடைகின்றது.

இந்நிலையில் இறுதி கட்ட சூறாவளிப் பிரசாரத்தில் தேசிய, மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு மார்ச் 15 ஆம் திகதி வெளியானது. இதற்கமைய ஏப்ரல் 23 ஆம் திகதி வாக்களிப்பு இடம்பெறும்.

இத்தேர்தலில் தமிழகத்தில் 5.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் 1977-ம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் இருமுனை போட்டியே இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது திமுக, அதிமுக, தவெக, நாதக என நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளது.

வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக தமிழகம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் எளிதாக வந்து வாக்களிக்க, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 ஆம் திகதியை பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!