இலங்கை செய்தி

கண்டி மற்றும் நுவரெலியாவிற்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: உடனடியாக வெளியேறுமாறு 8 பிரதேசங்களுக்கு உத்தரவு

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கண்டி மாவட்டத்தின் தொலுவ, மினிப்பே உள்ளிட்ட நான்கு பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த உள்ளிட்ட நான்கு பிரிவுகளுக்கும் மூன்றாம் கட்ட சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் வசிப்போர் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதேவேளை, கடந்த சில நாட்களில் மண்சரிவு அபாயம் குறித்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களைப் பரிசோதிக்குமாறு கோரிக்கைகள் கிடைத்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி சுமிந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், மத்திய மாகாணத்தில் அபாய நிலையில் காணப்பட்ட 128 பாடசாலைகளில், 120 பாடசாலைகளின் பாதுகாப்புப் பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை