இலங்கை

ஷாப்டரின் ஆயுள் காப்பீட்டுத் தொகையை பெறுவதற்காக கொலை? வெளிவந்த தகவல்

கோடீஸ்வர தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் ஆயுள் காப்பீட்டுத் தொகையை பெறுவதற்காக அல்லது அவரை சொத்தை பெறுவதற்காக அவருக்கு நெருக்கமான ஒருவரை கொலை செய்தாரா என்பது குறித்து விசாரணை அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த விடயம் உட்பட பல விடயங்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தினேஷ் ஷாப்டரின் மரணம் கொலை என நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், கொலையாளிகளை கண்டறிய கொலை மற்றும் கொள்ளை தொடர்பான புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

சிங்கப்பூர் மற்றும் பிரித்தானியாவில் அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பிலும் அதிகாரிகள் விசாரிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பல கோடி ரூபா பெறுமதியான ஆயுள் காப்புறுதித் தொகையைப் பெறுவதற்காக ஷாப்டரின் நெருங்கிய உறவினர் ஒருவர் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தற்போது சந்தேகிக்கின்றனர்.

ஷாப்டருக்கான காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு காப்புறுதி நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய அண்மையில் உத்தரவிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்