அமெரிக்காவில் முவ்வாயிரத்திற்கும் மேற்பட் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவு
இந்த மாதத்தில் காட்டுத்தீ ஏற்படுவதற்கு சாதாகமான வானிலை காணப்படுவதாகவும், இதனால் அமெரிக்காவிற்கு பயணிக்கும் சுற்றுலா பயணிகள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் காடுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஜுன் 30 ஆம் திகதிவரை அண்ணளவாக 157 சதவீதமான நிலப்பரப்பு காட்டுத்தீயினால் சாம்பலாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுவரை 36,262 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், 13 மாநிலங்களில் குறைந்தது 49 பெரிய தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையே கொலராடோ, யூட்டா, நியூ மெக்சிகோ, நெவாடா மற்றும் ஒரேகான் ஆகிய மாநிலங்கள் வறண்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சில பகுதிகளில் வெப்பநிலையானது 115°F ஆகவும், சில பகுதிகளில் 105°F ஆகவும் பதிவாகியுள்ளது. இந்த வெப்பநிலை தீபற்றுவதற்கு ஏதுவான சூழலை வழங்குவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான வறட்சியான காலப்பகுதியை அதிகூடிய வெப்பநிலை இன்னும் ஆபத்தானதாக மாற்றுவதாவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகவே இந்த மோசமான வானிலையை சமாளிக்க பட்டாசுகளை தடை செய்ய அல்லது கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்மொழிந்துள்ளனர்.





