அமெரிக்காவில் கம்யூனிச அச்சுறுத்தல் : ட்ரம்ப் கூப்பாடு
அமெரிக்காவில் கம்யூனிச அச்சுறுத்தல் மீண்டும் தலைத்தூக்கியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 250வது பிறந்தநாளை முன்னிட்டு ரஷ்மோர் (Rushmore) மலையில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்த மகத்தான ஆண்டுவிழாவை நாம் நெருங்கும்போது, நமது அமெரிக்க அடையாளம் ஒரு புதிய தாக்குதலுக்கு உள்ளாவதைக் காண்கிறோம். நமது நாட்டில் கம்யூனிச அச்சுறுத்தல் மீண்டும் தலைதூக்கியுள்ளது” என்றார்.
ஜனநாயகக் கட்சியின் அதிகார எதிர்ப்பு இடதுசாரிகள் அமெரிக்கத் தேர்தல்களில் பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ள நிலையில் ட்ரம்ப் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
சமீப வாரங்களில் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்ற ஒரு கருப்பொருளாக இது மாறியுள்ளது.





