இலங்கை

யாழில் Surprise Gift Deliveryயால் விபரீதம்! வெளிநாட்டில் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

வடக்கு மாகாணத்தில் Surprise Gift Delivery சேவை ஊடாக பல்வேறு சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் இருந்து தமது உறவுகளுக்காக ஆசையாக பலர் அன்பு பரிசுகளை Surprise Gift Delivery ஊடாக அனுப்பி வைக்கின்றனர். எனினும் சில குடும்பங்களுக்கு அது வாழ்வின் முடிவாகவும் மாறிய விட்ட துயர சம்பவங்களும் பதிவாகி உள்ளன.

அந்த வகையில் இளம் கணவன் ஒருவரால் யாழ்ப்பாணத்திலுள்ள தனது மனைவிக்கு Surprise Gift Delivery ஊடாக பிறந்த நாள் பரிசு அனுப்பியுள்ளார்.

வலிகாமத்தை சேர்ந்த ஆணொருவர் தென்மராட்சியில் பெண்ணெடுத்து திருமணம் செய்துள்ளார். திருமணமான சிறிது காலத்தில் முகவர் ஊடாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் மனைவியின் பிறந்த நாள் நெருங்கவும், மனைவிக்கு சப்பிறைஸ் கொடுக்க விரும்பியுள்ளார். இதற்கான தேடலில் வடமராட்சியை சேர்ந்த Surprise Gift Delivery செய்யும் ஒருவர் அறிமுகமாகி உள்ளார். இதற்காக பணமும் செலுத்தி பரிசை வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

கணவனின் கோரிக்கைக்கு அமைய மனையிடம் பரிசும் வழங்கப்பட்டுள்ளதுடன் அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த வீடியோவை தனது பேஸ்புக்கில் பகிரப்போவதாகவும் அதன் மூலம் லட்சக்கணக்கானவர்கள் அதை பார்ப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த பெண்ணை Tag செய்து போடவேண்டும் என கூறி பரிசு கொடுத்த இளம் மனைவியின் பேஸ்புக் ஐடியை வாங்கி நட்பு வட்டாரத்தில் இணைந்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட நெருக்கமான உறவு காரணமாக குறித்த பெண் Surprise Gift Delivery செய்யும் ஆணுடன் சென்றுள்ள நிலையில், மனைவிக்கு ஆசையாக பரிசு அனுப்பிய கணவனுக்கு பெரும் ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது.

வட மாகாணத்தில் Surprise Gift Delivery மூலம் இதுபோன்று பல சமூக சீர்கேடுகள் அதிகரித்துள்ளதுடன் பல குடும்பங்களின் பிரிவுக்கும் காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content