இலங்கை

இலங்கையில் லட்ச கணக்கில் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுகள்

இலங்கையில் 2022 ஆம் ஆண்டில் 9 இலட்சத்து 11 ஆயிரத்து 689 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் வருடாந்த செயற்றிறன் அறிக்கை மூலம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திணைக்களத்தின் வருடாந்த செயற்றிறன் அறிக்கையை வெளியிட்டு, கடந்த 5 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான கடவுச்சீட்டுகள் 2022 ஆம் ஆண்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை விட 2022 ஆம் ஆண்டில் 5 இலட்சத்து 29 ஆயிரத்து 138 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்து 18 ஆயிரத்து 66 ஆக பதிவாகியுள்ளது.

அவர்களில் 11 இலட்சத்து 24 ஆயிரத்து 022 இலங்கையர்களும் 8 இலட்சத்து 64 நான்காயிரத்து 648 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content