ஆசியா

தென்கொரியாவில் விமானத்தின் அவசரக் கதவைத் திறந்த நபர் கூறிய அதிர்ச்சி வாக்குமூலம்

தென்கொரியாவில் தரையிறங்கும் முன் Asiana விமானத்தின் அவசரக் கதவைத் திறந்து பரபரப்பை ஏற்படுத்திய நபர் அதிர்ச்சி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குறித்த நபரை அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். அந்தச் சம்பவம் விமானத்தில் இருந்த சுமார் 200 பேருக்குப் பீதியை ஏற்படுத்தியது.

சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட 9 பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

விமானம் தரையில் இருந்து சுமார் 250 மீட்டர் உயரத்தில் இருந்தபோது அந்த ஆடவர் கதவைத் திறந்ததாகக் கூறப்படுகிறது.

விமானத்தில் இருந்து உடனே வெளியேற வேண்டும் எனும் உணர்வு ஏற்பட்டதாகவும், அண்மையில் வேலையை இழந்ததால், மனஅழுத்தத்துக்கு ஆளாகியிருப்பதாகவும் அந்த நபர் கூறினார்.

அந்த ஆடவருக்கு மனநலப் பிரச்சினை இருப்பதைக் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விசாரணைக்குப் பிறகு அவரைக் கைதுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content