செய்தி

பீகாரில் மூன்று மகள்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்

Man commits suicide by hanging himself with three daughters in Bihar

பீகாரின்(Bihar) முசாபர்பூரில்(Muzaffarpur) உள்ள சக்ரா(Chakra) காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட நவல்பூர் மிஷ்ராலியா(Nawalpur Mishralia) கிராமத்தில் ஒரு தினக்கூலி தொழிலாளி மற்றும் அவரது மூன்று மகள்கள் தற்கொலை செய்து கொண்டதாகக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினக்கூலி தொழிலாளியான 40 வயது அமர்நாத் ராம், தனது மகள்களான 11 வயது ராதா குமாரி, 9 வயது ராதிகா மற்றும் 7 வயது ஷிவானி ஆகியோரை தூக்கிலிட்டு, பின்னர் அதே வழியில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மனைவி இறந்த பிறகு அரசு ரேஷன் பொருட்களை நம்பியிருந்த அமர்நாத், தனது குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிரமப்பட்டதால் இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

தனது இரண்டு மகன்களான 6 வயது சிவம் குமார் மற்றும் 4 வயது சந்தன் ஆகியோரையும் தூக்கிலிடச் சொன்னதாகக் கூறப்படுகிறது, ஆனால் பயத்தில் இரண்டு மகன்களும் குதிக்கவில்லை, உயிர் பிழைத்துள்ளனர்.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி