மத்திய கிழக்கு

ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரிகளை நாடு கடத்த திட்டமிடும் இஸ்ரேல்!

Israeli Prime Minister Benjamin Netanyahu speaks at the opening of the 25th Knesset session marking the anniversary of the “Iron Swords” war on Monday, in Jerusalem, October 28, 2024. DEBBIE HILL/Pool via REUTERS

பாலஸ்தீன குழுவுடனான போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹமாஸ் மூத்த அதிகாரிகளை நாடுகடத்த வேண்டுமா என்பது குறித்து இஸ்ரேல் தனது நிலைப்பாட்டை மென்மையாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

“சில உயர் இராணுவத் தளபதிகளை அடையாளமாக வெளியேற்றுவதற்கு இஸ்ரேல் இப்போது தயாராக உள்ளது” என்று சர்வதேச ஊடகம் ஒன்று  செய்தி வெளியிட்டுள்ளது.

“காசாவில் ஹமாஸ் மூத்த அதிகாரிகள் அதிகம் இல்லை” என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கூறியதாக அது மேற்கோள் காட்டியது.

“அவர்களை நாடுகடத்த அனுப்ப எங்களுக்கு ஒரு பெரிய கப்பல் தேவையில்லை – ஒரு சிறிய படகு போதும் என தெரிவித்துள்ளது.

ஹமாஸின் இராணுவப் பிரிவை அகற்ற இஸ்ரேல் கோருகிறது, ஆனால் நூற்றுக்கணக்கான போராளிகள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க தயாராக இருப்பதாகவும் அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வெள்ளை மாளிகைக்கு மூன்றாவது வருகைக்கு முன்னதாக, கத்தாரில் நேற்று அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது.

VD

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.