ஐரோப்பா செய்தி

வட்டி விகித குறைப்பு சாத்தியப்படுமா? இங்கிலாந்து வங்கியின் தீர்மானம்!!

இங்கிலாந்து வங்கியானது வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் 3.75 என்ற தற்போதைய நிலையை பேண தீர்மானித்துள்ளதாக  அதன் ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி அறிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் பணவியல் கொள்கைக் குழு (MPC), அதன் சமீபத்திய கூட்டத்திற்குப் பிறகு, இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வட்டி விகிதங்களை மாற்றாமல் வைப்பதற்கான ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் வாக்கெடுப்பு, எட்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் பிளவுபட்டது. வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஹியூ பில் ( Huw Pill), வட்டி விகிதத்தை 4% ஆக உயர்த்துவதற்கு வாக்களித்தார்.

பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வட்டி விகிதத்தைக் குறைப்பது தற்போதைக்குச் சரியாக இருக்காது என்று ஆண்ட்ரூ பெய்லி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் கண்டு வந்தாலும், பணவீக்கம் மீண்டும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அபாயங்கள் இன்னும் நீடிப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

வட்டி விகிதங்கள் குறைக்கப்படாதது கடன்கள் மற்றும் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்குச் சற்று ஏமாற்றத்தை அளித்தாலும், விலையுயர்வைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை  அவசியம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

எதிர்கால பொருளாதாரத் தரவுகளைப் பொறுத்தே வட்டி விகிதக் குறைப்பு குறித்த அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என ஆளுநர் தெளிவுபடுத்தியுள்ளார்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!