அச்சுறுத்தலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயார் – ஈரான் அறிவிப்பு
அமெரிக்கா தனது “அச்சுறுத்தும் அணுகுமுறை” மற்றும் “விரிவாக்கப் போக்கை” மாற்றினால், ராஜதந்திர பேச்சுவார்த்தைக்கு தயார் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, தெரிவித்துள்ளார்.
துருக்கி, கட்டார், சவூதி அரேபியா, எகிப்து, ஈராக் மற்றும் அசர்பைஜான் வெளியுறவு அமைச்சர்களுடன் நடந்த தொலைபேசி உரையாடல்களில் அவர் இதை கூறியதாக அவரது அதிகாரப்பூர்வ டெலிகிராம் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், அமெரிக்கா தனது தற்போதைய அணுகுமுறையை மாற்றிக் கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்றும், இல்லையெனில் அச்சுறுத்தல் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிராக ஈரான் தனது நாட்டை பாதுகாக்க ஆயுதப்படைகள் முழு தயார்நிலையில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




