இலங்கை செய்தி

வடக்கில் கண்ணிவெடி அகற்றல் குறித்து ஆராய்வு

இடம்பெயர்ந்த மக்களின் துரித மீள்குடியமர்வு நடவடிக்கைகளுக்கும், பாதுகாப்பான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கும் இந்நிறுவனங்களின் அர்ப்பணிப்பான பணிகள் மிகப்பெரிய உதவியாக அமைந்திருந்ததை அவர் இதன்போது நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுத்து வரும் ‘ஹலோ ட்ரஸ்ட்’ (HALO Trust) மற்றும் ‘மக்’ (MAG) ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (22.06.2026) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின்போது, மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் வடக்கு மாகாணத்தில் இதுவரை ஆற்றியுள்ள அளப்பரிய சேவைகளுக்கு ஆளுநர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

குறிப்பாக, போரால் இடம்பெயர்ந்த மக்களின் துரித மீள்குடியமர்வு நடவடிக்கைகளுக்கும், பாதுகாப்பான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கும் இந்நிறுவனங்களின் அர்ப்பணிப்பான பணிகள் மிகப்பெரிய உதவியாக அமைந்திருந்ததை அவர் இதன்போது நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

மேலும், வடக்கு மாகாணத்தில் முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய எஞ்சிய கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள் மற்றும் அதற்கான சவால்கள் தொடர்பாகவும் இச்சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்த விசேட கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை