இலங்கை

தேசிய பாதுகாப்புக்கு முதலிடம் வழங்குமாறு வலியுறுத்து!

“அரசியல் உறுதிமொழிகளைவிட தேசிய பாதுகாப்பே மிக முக்கியம். அதனை கருத்திற்கொண்டே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.” என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“பொருளாதாரத்துக்கு தேசிய பாதுகாப்பு எவ்வளவு முக்கியத்துவம் என்பதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிந்து வைத்துள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே, தீர்மானங்களை எடுக்கும்போது தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு செயல்படுமாறு கோருகின்றோம்.

வடக்கில் காணி விடுவிப்பின்போதும் உரிய பாதுகாப்பு மீளாய்வு அவசியம். தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் உள்ள இடங்களாயின் அவற்றின் உரிமையாளர்களுக்கு மாற்று காணி அல்லது உரிய இழப்பீட்டை வழங்க முடியும்.”எனவும் நளின் பண்டார குறிப்பிட்டார்.

அதேவேளை, தேசிய பாதுகாப்பு உட்பட அனைத்து விடயங்களிலும் அரசாங்கம் உரிய வகையிலேயே முடிவுகளை எடுத்துவருகின்றது என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க இதன்போது தெரிவித்தார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்