ஐரோப்பா

ஜெர்மனியில் குழந்தைகளுக்கான உதவித் தொகை தொடர்பில் வெளியான தகவல்

ஜெர்மனியில் குழந்தைகளுக்காக வழங்கப்படும் உதவித் தொகை உயர்வடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியின் தற்போதைய நிதி அமைச்சர் கிறிஸ்டியான் லின் எதிர்வரும் ஆண்டு குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற நிதியத்தை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதாவது 2023 ஆம் ஆண்டு ஒரு குழந்தைக்கு தலா 250 யூரோவாக உயர்த்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்பொழுது பல தரப்பினரிடம் இருந்து இந்த நிதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் நிதி அமைச்சர் லின் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் தான் 2025 ஆம் ஆண்டு கிண்டர்கெல்ட் என்று சொல்லப்படுகின்ற குழந்தைகளுக்காக தொகையை உயர்த்த உள்ளதாகவும், இந்நிலையில் இந்த வருடம் செப்டம்பர் மாதம், சாதாரணமாக ஒருவர் வாழ்வதற்கு எவ்வளவு பணம் வழங்க வேண்டும் என்ற நிபுணர் குழுவின் அறிக்கையின் பின் எவ்வளவு தொகை இந்த கிண்டர்கெல்ட்டாக உயர்த்தப்படும் என்றும் அவர் தீர்மானிப்பார் என்றும் கூறியுள்ளார்.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் குழந்தைகளுக்கான அடிப்படை கொடுப்பனவு என்ற ரீதியில் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content