செய்தி

கோலியை பதவியில் இருந்து நான் நீக்கவில்லை – சர்ச்சைக்கு பதில் அளித்த கங்குலி

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நான் நீக்கவில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி வலம் வந்த சர்ச்சைக்கு பதில் அளித்துள்ளார். எம்எஸ் தோனிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக விராட்கோலி செயல்பட்டு வந்தார்.

அதுவும், பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றபோது, கோலி கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி தோல்விக்கு பிறகு கேப்டன் பதவியை ராஜினாமா செய்து விராட் கோலி ஷாக் கொடுத்தார்.

திடீரென டி20 கேப்டன் பதவி, அதன்பின் ஒருநாள் கேப்டன் பதவி மற்றும் கடைசியாக 2022ம் ஆண்டு டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பிசிசிஐ செய்யும் அரசியலே காரணம் என்று பலரும் கூறி வந்தனர். அதுமட்டுமில்லாமல், விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு சவுரவ் கங்குலியே முக்கிய காரணம் என்று ரசிகர்களிடையே விமர்சனங்கள் எழுந்தன.

அதாவது, ஐபிஎல் தொடரில் விராட் கோலி, சவுரவ் கங்குலியின் கைகளை குலுக்காமல் சென்றது, இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை நிறுத்தியது போன்ற செயலால் இந்த விமர்சனங்கள் எழுந்தது. இதனிடையே, ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

எனவே, கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்ட விவகாரத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. குறிப்பாக, பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி மீதும் விமர்சனங்கள் குவிந்தது. இந்த நிலையில், கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை நான் நீக்கவில்லை. இந்த சர்ச்சை குறித்து நான் பலமுறை விளக்கமளித்துள்ளேன். ஆனாலும் மீண்டும் மீண்டும் கேட்கப்படுகிறது என தெரிவித்தார்.

இந்திய அணியின் டி20 கேப்டனாக செயல்பட விராட் கோலி விரும்பவில்லை. எனவே, கோலி முடிவுக்கு பின், நீங்கள் டி20 கேப்டனாக செயல்பட விரும்பவில்லையெனில் ஒட்டுமொத்தமாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கேப்டன் பதவியில் இருந்து (ஒருநாள் மற்றும் டி20) நீங்கள் விலகுவது நல்லது என்று நான் கூறினேன்.

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிற்கு (ஒருநாள் மற்றும் டி20) தனி கேப்டன், சிவப்பு பந்து கிரிக்கெட்டிற்கு (டெஸ்ட்) தனி கேப்டன் இருக்கட்டும் என தெரிவித்ததாக கூறியுள்ளார். மேலும், 3 வகை கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் கேப்டன் பதவி வகிக்க விராட் கோலி விரும்பாததால் ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பெற்றுகும்படி நான் கூறினேன்.

கேப்டன்சியை ஏற்றுக் கொள்ளுமாறு ரோகித் சர்மாவிடம் ஆலோசனை நடத்தியது உண்மைதான். இந்திய அணியின் ஒட்டுமொத்த கேப்டன்சியையும் ஏற்றுக்கொள்ள ரோகித் சர்மா விரும்பவில்லை. ரோகித் சர்மா கேப்டன்சியை ஏற்றுக் கொண்டதில் எனது பங்கு சிறிது உள்ளது என்றும் இந்திய கிரிக்கெட் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் நான் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டேன். அதைத்தான் செய்தேன் என விளக்கமளித்தார்.

(Visited 2 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content