ஐரோப்பா

உக்ரைனில் ஹைப்பர்சோனிக் ஓரெஷ்னிக் ஏவுகணை தாக்குதல்!

ரஷ்ய இராணுவம் ஹைப்பர்சோனிக் ஓரெஷ்னிக் ஏவுகணையை உக்ரைன் நோக்கி ஏவியதாக அறிவித்துள்ளது.

ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் இல்லத்தின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக மேற்படி ஏவுகணை ஏவப்பட்டதாக கூறப்படுகிறது.

இடைநிலை தூர ஓரெஷ்னிக் ஏவுகணையை ரஷ்யா பயன்படுத்துவது இது இரண்டாவது முறையாகும். இந்த ஏவுகணை ஒலியின் வேகத்தை விட 10 மடங்குக்கும் அதிகமான வேகத்தில் செல்ல கூடியது எனவும், இதனை இடைமறிக்க இயலாது என்றும் புட்டின் அறிவித்துள்ளார்.

இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை மட்டுமல்ல, வழக்கமான ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது.

உக்ரைனில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்பை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆளில்லா வான்வழி வாகனங்களை உற்பத்தி செய்யும் ஆலைகள், அத்துடன் உக்ரைனின் இராணுவ-தொழில்துறை வளாகத்தை ஆதரிக்கும் எரிசக்தி உள்கட்டமைப்பு ஆகியவை இலக்குகளில் அடங்கும்” என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும்  நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் அவ்வாறான ஏவுகணை ஏவப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்