ஐரோப்பா செய்தி

வேல்ஸில் காணாமல்போன ஐவரில் மூவர் சடலங்களாக மீட்பு!

  • April 13, 2023
  • 0 Comments

வேல்ஸில் காணாமல் போன ஐவர் தேடப்பட்டு வந்த நிலையில், அவர்களில் மூன்று பேரின் சடலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோஃபி ருசன், ஈவ் ஸ்மித், டார்ஸி ரோஸ், உள்ளிட்ட ஐவர் சனிக்கிழமை அதிகாலை கார்டிஃபின் லானேடெயர்ன் பகுதியில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் காணாமல்போனதாக கூறப்பட்டது. இந்நிலையில், இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்திருந்த பொலிஸார் இன்றைய தினம் மூவரின் சடலங்களை மீட்டதாக கண்டுப்பிடித்துள்ளனர். அதேநேரம், இருவர் பலத்த காயங்களுக்கு […]

செய்தி வட அமெரிக்கா

பனியில் உறைந்த காருக்குள் சிக்கிய முதியவர்., ஒரு வாரத்திற்கு பின் உயிருடன் மீட்பு!

கலிபோர்னியாவில் பனி மூடிய சாலையில் சிக்கித் தவித்த முதியவர் ஒரு வாரத்திற்கும் மேலாக இனிப்புகள் மற்றும் குரோசண்ட் பாண்களை சாப்பிட்டு உயிர் பிழைத்துள்ளார். 81 வயதான ஜெர்ரி ஜோரெட் , கலிபோர்னியாவின் பிக் பைனில் உள்ள தனது வீட்டிலிருந்து நெவாடாவின் கார்ட்னெர்வில்லில் உள்ள தனது குடும்ப வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.பிப்ரவரி 24 அன்று தனது பயணத்தின் போது, ​​கணிதவியலாளரும், முன்னாள் நாசா ஊழியருமான அவர், தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, தனது பயணத்தின் 30 நிமிடங்களில் தடைபட்ட […]

முடிசூட்டு விழாவில் பங்கேற்க இளவரசர் ஹாரி மேகன் தம்பதிக்கு அழைப்பு..

  • April 13, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில் நீண்ட காலம் ராணியாக இருந்த ராணி 2ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் திகதி தனது 96 வயதில் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து 2 நாட்களுக்கு பின் அவரது மகன் மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக அரியணை ஏறினார். இந்த சூழலில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, நடப்பு ஆண்டு மே மாதம் 6ம் திகதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியது. இதில், பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல், […]

செய்தி வட அமெரிக்கா

மூன்று வயது குழந்தையின் கைக்கு கிடைத்த துப்பாக்கி.. சகோதரிக்கு நேர்ந்த சோகம்!

அமெரிக்காவில் மூன்று வயது குழந்தை தற்செயலாக தனது சகோதரியைச் சுட்டுக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. டெக்சாஸில் உள்ள ஹாரிஸ் கவுண்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்று வயது சிறுமி தற்செயலாக தனது சகோதரியை துப்பாக்கியால் சுட்டார். இதில், அந்த நான்கு வயது சிறுமி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.சம்பவம் நடந்த டோம்பால் பார்க்வேக்கு அருகில் உள்ள பம்மல் நார்த் ஹூஸ்டன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பமும் நண்பர்களுமாக ஐந்து பெரியவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் ஒருவரது குழந்தைகள் தான் […]

ஐரோப்பா செய்தி

வேல்ஸில் காணாமல்போன ஐவரில் மூவர் சடலங்களாக மீட்பு!

  • April 13, 2023
  • 0 Comments

வேல்ஸில் காணாமல் போன ஐவர் தேடப்பட்டு வந்த நிலையில், அவர்களில் மூன்று பேரின் சடலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோஃபி ருசன், ஈவ் ஸ்மித், டார்ஸி ரோஸ், உள்ளிட்ட ஐவர் சனிக்கிழமை அதிகாலை கார்டிஃபின் லானேடெயர்ன் பகுதியில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் காணாமல்போனதாக கூறப்பட்டது. இந்நிலையில், இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்திருந்த பொலிஸார் இன்றைய தினம் மூவரின் சடலங்களை மீட்டதாக கண்டுப்பிடித்துள்ளனர். அதேநேரம், இருவர் பலத்த காயங்களுக்கு […]

ஐரோப்பா செய்தி

பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்கள் தொடர்பில் பிரதமர் ரிஷி சுனக் அதிரடி அறிவிப்பு!

  • April 13, 2023
  • 0 Comments

பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிப்பவர்கள் அங்கு தங்கமுடியாது என்ற தகவலை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவில் புலம்பெயர்வோருக்கான புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது குறித்து பேசிய அவர், உள்துறை அலுவலகத்தின் மூத்த உதவியாளர்களும், வழக்கறிஞர்களும் இணைந்து புதிய சட்டத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.மேம்பட்ட வாழ்க்கைக்காக மக்கள் நாடுகடத்தப்படுவதை தவிர்க்கும் நோக்குடன் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத குடியேற்றம் பற்றிய பிரச்சினையை எனது ஐந்து முதல் முன்னுரிமைகளில் ஒன்றாக ஆக்கியுள்ளேன். சட்டவிரோத படகு பயணங்களை நிறுத்துவதாக நான் கொடுத்த […]

செய்தி வட அமெரிக்கா

கத்தி முனையில் பல ஆண்களிடம் கைவரிசயை காட்டிய 18 வயது யுவதி!

கனடாவின் மிஸ்ஸிசாகுவாவில் கத்தி முனையில் ஆண்களிடம் கொள்ளையிட்ட 18 வயது யுவதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெஸ்மின் ஹோங் என்ற 18 வயது யுவதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். இணைய வழி டேடிங் செயலி ஒன்றின் மூலம் அறிமுகமான ஆண்களிடம் குறித்த யுவதி இவ்வாறு கொள்ளையிட்டுள்ளார். இணைய வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட ஆண்களை மால்டன் பகுதிக்கு அழைத்து வந்து அவர்களிடம் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இவ்வாறு வேறும் சிலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் சமூகவலைத்தளங்களுக்கு அறிமுகமாகும் புதிய கட்டுப்பாடு!

  • April 13, 2023
  • 0 Comments

பிரான்ஸில் சமூக வலைத்தளங்களில் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படவுள்ளது. இந்த கட்டுப்பாடுகளுக்கு ஆதரவாக வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் ‘ஆதரவு வாக்கு சேகரிக்கப்பட்டது. டிக்-டொக் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைத்தளங்களை பார்வையிடுவதற்கு 15 வயதுக்கு கீழுள்ள சிறுவர்களுக்கு அவர்களது பெற்றோர்களது சம்மதம் வேண்டும் எனும் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை குறித்த சமூகவலைத்தள நிறுவனங்கள் எழுத்து மூலமாக தங்களது செயலியின் முகப்பு பக்கத்தில் காண்பிக்க வேண்டும் என இந்த புதிய கட்டுப்பாடு தெரிவிக்கிறது. மேற்படி கட்டுப்பாடு தொடர்பாக நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் அச்சுறுத்தும் எலிகள் – மக்களுக்கு விசேட அறிவிப்பு

  • April 13, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் ஒரு பிரபலச் சுற்றுலாத்தலத்தில் பூனைகள் அளவு பெரிதாக உள்ள எலிகளால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இந்த எலிகள் பாறைகளை அரிப்பதாக அஞ்சப்படுகிறது. டென்பை (Tenby) ஊரின் காசல் கடற்கரையில் (Castle Beach) எலிகள் அங்குமிங்கும் ஓடும் காணொளிகள் இணையத்தில் பரவுகின்றன. அண்மை மாதங்களில் எலி பிரச்சினை மோசமாகி வருவதாகக் குடியிருப்பாளர்கள் செய்தி நிறுவனத்திடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறவைகளுக்கு உணவளிக்க வேண்டாமென்றும் உணவைக் கீழே போடவேண்டாமென்றும் அவ்வட்டார அதிகாரிகள் மக்களை வலியுறுத்துகின்றனர். எலிகள் வசிப்பதாக நம்பப்படும் […]

ஐரோப்பா செய்தி

இலங்கையில் நெருக்கடி நிலை – நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி

  • April 13, 2023
  • 0 Comments

லங்கையில் நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவறையில் பால் மற்றும் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கு உணவு விநியோகிக்கும் தரப்பினருக்கான கொடுப்பனவு வழங்கப்படாமையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகின்றது. இதேவேளை, மின்சாரம், எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளமையினால், நாடாளுமன்றத்தில் உணவுக்கான செலவு 30 வீதத்தால் அதிகரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் உணவுக்காக மாதாந்தம் சுமார் 90 இலட்சம் செலவிடப்பட்டதாகவும் அது தற்போது ஒரு கோடியைத் தாண்டியுள்ளதாகவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.