ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் சமூகவலைத்தளங்களுக்கு அறிமுகமாகும் புதிய கட்டுப்பாடு!

பிரான்ஸில் சமூக வலைத்தளங்களில் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படவுள்ளது.

இந்த கட்டுப்பாடுகளுக்கு ஆதரவாக வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் ‘ஆதரவு வாக்கு சேகரிக்கப்பட்டது.

டிக்-டொக் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைத்தளங்களை பார்வையிடுவதற்கு 15 வயதுக்கு கீழுள்ள சிறுவர்களுக்கு அவர்களது பெற்றோர்களது சம்மதம் வேண்டும் எனும் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனை குறித்த சமூகவலைத்தள நிறுவனங்கள் எழுத்து மூலமாக தங்களது செயலியின் முகப்பு பக்கத்தில் காண்பிக்க வேண்டும் என இந்த புதிய கட்டுப்பாடு தெரிவிக்கிறது.

மேற்படி கட்டுப்பாடு தொடர்பாக நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, 82 ஆதரவு வாக்குகளும் 2 எதிர்ப்பு வாக்குகளும் பதிவாகின.

இதனால் மேற்படி கட்டுப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், இது தொடர்பான அறிக்கை செனட் மேற்சபையினரது பார்வைக்கு கொண்டுசெல்லப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பிரான்சில் டிக்-டொக் சமூகவலைத்தளத்தை நிரந்தரமாக தடை செய்வதற்குரிய விவாதங்களும் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content