இலங்கை

குருந்தூர் மலையில் பக்தர்களுக்கு இடையூறு விளைவித்ததாக முறைப்பாடு!

  • August 21, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் நிகழ்வில் பக்தர்களுக்கு இடையூறு விளைவித்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொண்டு பொங்கல் பண்டிகையை ஏற்பாடு செய்ததாகவும், இந்து மக்களின் உரிமைகளுக்கு எதிராக சிங்கள பௌத்த சக்திகள் செயற்பட்டதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 18ம் திகதி குருந்தி கோவில் அருகே பொங்கல் நிகழ்வு நடபெற்ற போது, சிங்களவர்கள் ஆசி வழங்கும் நிகழ்ச்சி நடத்த சென்றதால், இரு பிரிவினரிடையே […]

இலங்கை

யாழில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த விபத்து

  • August 21, 2023
  • 0 Comments

புதுகுடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் 19 அன்றைய தினம் இரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பந்தன் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் பரந்தன் பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேர் மோதியதில் பரந்தன் உமையாள்புரம் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் நகுலேஸ்வரன் 47 வயதுடைய நபர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாண மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி நேற்று (20) உயிரிழந்துள்ளார் […]

இலங்கை

04 கடவுச்சீட்டுக்களுடன் பெண் ஒருவர் கைது!

  • August 21, 2023
  • 0 Comments

கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள், பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். குறித்த பெண்ணின் உடைமையில் நான்கு கடவுச்சீட்டுக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளானர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்,   புத்தளம் கல்பிட்டி பகுதியை சேர்ந்த 48 வயதான வர்த்தக பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இன்று (21.08) அதிகாலை 04.41 மணியளவில் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்தடைந்தார். சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்வதற்காக குறித்த […]

தென் அமெரிக்கா

கலிபோர்னியாவை அச்சுறுத்திய புயல் கரையை கடந்தது!

  • August 21, 2023
  • 0 Comments

கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 84 வருடங்களில் இல்லாத அளவில் ஹிலாரி புயல் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித் புயல் காணரமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 05 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிலாரி சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால் தெற்கு கலிபோர்னியாவில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 119 கிலோமீட்டர் வேகத்தில், மெக்சிகோவில் உள்ள பாஜா கலிபோர்னியா தீபகற்பத்தில் இருந்து புயல் கரையை கடந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

காலியில் விபத்துக்குள்ளாகிய கார் எரிந்து நாசமானது!

  • August 21, 2023
  • 0 Comments

காலி, பலபிட்டிய அத்தேகந்துர கல்வெட்டுக்கு அருகில் இன்று (21.08) கார் ஒன்று விபத்துக்குள்ளாகி முற்றாக எரிந்து நாசமானது. குறித்த சொகுசு கார் டெலிபோன் டவரில் மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்த போது காருக்குள் சாரதி உட்பட மூவர் இருந்ததாகவும், விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை

எல்ல பாலத்தை அநாகரீகமான சித்திரங்களை வரைந்து சேதப்படுத்திய சுற்றுலாப்பயணிகள்!

  • August 21, 2023
  • 0 Comments

ஒன்பது வளைவுகள் கொண்ட எல்ல பாலத்தை சுற்றுலா பயணிகள் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எல்ல புகையிரத நிலையத்தின் நிலைய அதிபர்  அஷேந்திர திஸாநாயக்க, அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள்  சுவர்களில் பல்வேறு ஓவியங்களையும் கடிதங்களையும் எழுதி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். “எல்லா ஒன்பது வளைவுப் பாலத்திற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர் எனவும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர் மிகவும் கட்டுக்கடங்காமல் நடந்துகொள்கின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டிள்ளார். சில இடங்களில் அநாகரீகமான சித்திரங்கள் […]

வட அமெரிக்கா

மெக்சிகோவில் உயரமான மலையில் ஏறிய 4 பேர் மரணம்

  • August 21, 2023
  • 0 Comments

மெக்சிகோவின் மிக உயரமான Pico de Orizaba மலையை ஏறிக்கொண்டிருந்த நால்வர் விழுந்து உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. நால்வரும் மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்ட்டுள்ளனர். 5,600 மீட்டர் உயரங்கொண்ட பிக்கோ டெ ஒரிசபா (Pico de Orizaba) மலை, வட அமெரிக்காவின் ஆக உயரமான எரிமலையாகும். உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் முயற்சி தொடர்வதாக அந்நாட்டின் அரசாங்கம் Facebook பக்கத்தில் தெரிவித்தது. மலையின் தென்புறப் பகுதியிலிருந்து ஏறியபோது விபத்து நேர்ந்தது. இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில், பெர்லா திஜெரினா […]

வட அமெரிக்கா

கனடாவில் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட மக்கள்

  • August 21, 2023
  • 0 Comments

கனடாவில் கெலோவ்னா நகரைச் சுற்றியுள்ள மலைகளில் உள்ள மரங்கள், அரியவகை தாவரங்கள் இரவிலும் எரிகின்றன. காட்டுத் தீ அதிகரித்து வருவதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. வான்கூவரில் இருந்து கிழக்கே சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நகரமான கெலோவ்னாவைச் சுற்றியுள்ள மலைகளிலும் தீ பரவ தொடங்கி உள்ளது. இங்கு தீ அதிகரித்து இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க பெரும் போராட்டத்தில ஈடுபட்டுள்ளனர். குட்டி விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பேரிடர் படையினருக்கு ஏதுவாக […]

இலங்கை

சிங்கப்பூர் பயணமானார் ரணில்!

  • August 21, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (21.08) அதிகாலை சிங்கப்பூர் புறப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் குறித்த விஜயத்தில் ,  ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். ஜனாதிபதி தனது விஜயத்தின் போது, ​​சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யெகெப்பை சந்திக்கவுள்ளார். அத்துடன்  சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் […]

பொழுதுபோக்கு

‘கேப்டர் மில்லர்’ இயக்குனருடன் மீண்டும் இணையும் பெரிய வீட்டு மாப்பிள்ளை…

  • August 21, 2023
  • 0 Comments

‘கேப்டன் மில்லர்’ இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராக்கி, ‘சாணிக் காயிதம்’  ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள   திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் 1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்டது. இப்படம் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி […]