உலகம்

கஞ்சா செடிகளை மேய்ந்து போதைக்கு அடிமையான ஆடுகளால் ஏற்பட்ட பதற்றம்!

  • September 30, 2023
  • 0 Comments

இந்தியாவில் கஞ்சா முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சில குறிப்பிட்ட நாடுகள் மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கியுள்ளன. அங்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் கஞ்சா வளர்க்கப்படுகிறது. அப்படியொரு விசித்திரமான சம்பவம் கிரீஸில் நடந்துள்ளது. இங்கு கஞ்சா செடிகளை சாப்பிட்டது மனிதர்கள் அல்ல, ஆடுகள். மருத்துவ நோக்கங்களுக்காக பயிரிடப்பட்ட சுமார் 100 கிலோ கஞ்சாவை பசியால் வாடிய ஆடு மந்தை ஒன்று சாப்பிட்டுள்ளது. கிரேக்கத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்திய டேனியல் புயல் கடந்து செல்லும் போது இந்த சம்பவம் நடந்தது. […]

இலங்கை

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை மீள ஆரம்பிப்பதில் சிக்கல்!

  • September 30, 2023
  • 0 Comments

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை மீண்டும் ஆரம்பிக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய பெரும்பாலான பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமையே இந்நிலைமைக்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நுரைச்சோலையில் ஒரு ஜெனரேட்டரை இயக்க 12 பொறியியலாளர்கள் தேவை. ஆனால் அவர்களில் பாதிபேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே அதனை மீண்டும் இயக்குவதற்கு கடினமான சூழ்நிலை நிலவுவதாக கூறப்படுகிறது. இலங்கையின் தேசிய மின்சாரத் தேவையில் நுரைச்சோலை அனல்மின் நிலையமானது 40 வீதத்தை வழங்குகின்றமை […]

ஐரோப்பா

கெர்சனில் 06 போர் குற்றங்களை பதிவு செய்த உக்ரைன்!

  • September 30, 2023
  • 0 Comments

கெர்சனில் நடைபெற்ற 06 போர் குற்றங்களை உக்ரைனிய பொலிஸார் பதிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பல ராக்கெட் லாஞ்சர்கள், மோர்டார்கள், கனரக பீரங்கி, ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் இப்பகுதி தீக்கு உட்பட்டது என உக்ரைன் படையினர் தெரிவித்துள்ளனர். “ரஷ்ய இராணுவம் வழிகாட்டப்பட்ட வான்வழி குண்டுகளை பெரிஸ்லாவ் மற்றும் ஒலிவ்கா மீது வீசியது” என்றும்,  வெடிப்புகளின் விளைவாக பெரிஸ்லாவில் ஏழு குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இலங்கை

இலங்கையில் தலைமறைவாக உள்ள பிரித்தானிய பெண் தொடர்பில் வெளியான புதிய தகவல்

  • September 30, 2023
  • 0 Comments

கடந்த வருடம் இலங்கையில் நடந்த காலிமுகத்திடல் போராட்டத்தின் போது வீடியோக்களை பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரித்தானிய சமூக ஊடக பெண் ஒருவர், தான் இன்னும் இலங்கையில் தலைமறைவாக இருப்பதாக பிரித்தானிய இணையத்தளம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில், 13 மாதங்களாக தலைமறைவாக இருந்து நம்பிக்கை இழந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 35 வயதான Kayleigh Fraser, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை குடிவரவு அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார், அவரது தங்குமிடம் சோதனையிடப்பட்டது மற்றும் அதிகாரிகள் சட்டவிரோத விசாவில் […]

இலங்கை

முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் குறித்து விசாரணை நடத்துமாறு வலியுறுத்தல்!

  • September 30, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானுமான டி.சரவணராஜாவின் திடீர் பதவி விலகல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இலங்கை சட்டதரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகல் அச்சுறுத்தல்களால் தூண்டப்பட்டதாகக் கூறப்படுகின்ற நிலையல், இது  குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. “சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும், நீதித்துறையின் அனைத்து உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் சட்டதரணிகள் சங்கம் உறுதி பூண்டுள்ளது. […]

இலங்கை

சவூதிஅரேவியாவுக்கு பணிப்பெண்ணாக சென்றவருக்கு நேர்ந்த கதி: ஆணிகளை உட்கொள்ள வைத்த கொடூரம்!

  • September 30, 2023
  • 0 Comments

சவூதிஅரேவியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற ஒருவருக்கு, உணவுக்காக ஆணிகளை உட்கொள்ள வைத்து, நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை நாளை வெளியிடப்படவுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் ஊடாக கடந்த ஜீலை மாதம் பணிப்பெண்ணாக ஒருவர் சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். அவர் பணிப்புரிந்த வீட்டு உரிமையாளரினால் உணவளிக்கப்படாமை தொடர்பில், அவரை சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக […]

இலங்கை

திருகோணமலையில் விகாரை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம்!

  • September 30, 2023
  • 0 Comments

திருகோணமலை இலுப்பைக் குளத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் விகாரை அமைக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் (01.10) போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், கட்டுமான கிழக்கு மாகாண ஆளுநரினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் குறித்த தடை உத்தரவை மீறி மீளவும் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த சூழ்நிலையில், போராட்டம் ஒன்றை முன்னெடுக்க மக்கள் […]

இலங்கை

IMF இன் 02ஆம் தவணை கடனை பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினைகள்!

  • September 30, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பில் செயற்குழுவால் எட்ட முடியாத பிரச்சினைகளில் ஒன்று வரி அறவீடு வலையமைப்பு சாத்தியமற்றது என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இன்று (30.09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது, ​​நாங்கள் பல ஒப்பந்தங்களை எட்டியுள்ளோம். அடுத்த சில வாரங்களில் அந்த ஒப்பந்தங்களை எட்ட முடியும் […]

இந்தியா

மருதமலை கோவிலுக்கு மலைப்பாதையில் வாகனங்களில் செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு

  • September 30, 2023
  • 0 Comments

கோவை மருதமலை கோவிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதால் வருகின்ற 5ம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு மலைபாதையில் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்தான செய்தி அறிக்கையில் “மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக மின்தூக்கி அறை, காத்திருப்பு அறை, கட்டண சீட்டு வழங்கும் இடம் ஆகியவற்றுடன் மின்தூக்கி(LIFT) வசதி ஏற்படுத்தும் பணி, மலைசாலையில் உள்ள தார் சாலையை […]

இலங்கை செய்தி

கணேமுல்ல சஞ்சீவவின் ஆயுதக் களஞ்சியம் கண்டுப்பிடிப்பு!

  • September 30, 2023
  • 0 Comments

பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ என்பவரின் ஆயுதக் களஞ்சியத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 02 கைக்குண்டுகள், மைக்ரோ ரக துப்பாக்கி, ரிவால்வர் மற்றும் 43 டி-56 தோட்டாக்கள் ஆகியவை இனங்காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் குற்றக் கும்பலைச் சேர்ந்த சஞ்சீவ குமார அல்லது கணேமுல்ல சஞ்சீவ தற்போது 90 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரிடம்  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.