இலங்கை செய்தி

ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு சட்டத்தின் முன் சிறப்பு நிவாரணம் வழங்க முடியாது

  • October 16, 2023
  • 0 Comments

ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு சட்டத்தின் முன் விசேட நிவாரணம் வழங்க முடியாது என சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். தம்மை கைது செய்ய தடை விதிக்குமாறு கோரி ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனு இன்று விசாரணைக்கு வந்தது. குறித்த ரிட் மனு நீதியரசர்கள் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சமத் மொரேஸ் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரு அங்கத்தவர் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட […]

ஐரோப்பா செய்தி

ஸ்பெயினின் கேனரி தீவுகளை சென்றடைந்த 8,561 புலம்பெயர்ந்தோர்

  • October 16, 2023
  • 0 Comments

கடந்த இரண்டு வாரங்களில் குறைந்தபட்சம் 8,561 புலம்பெயர்ந்தோர் கேனரி தீவுகளை அடைந்துள்ளனர், இது இந்த ஆண்டின் மொத்த வருகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாக உள்ளது என்று ஸ்பெயினின் உள்துறை அமைச்சகத்தின் தரவு காட்டியது. இந்த ஆண்டு ஜனவரி 1 மற்றும் அக்டோபர் 15 க்கு இடையில், அட்லாண்டிக்கில் உள்ள தீவுகள் 23,537 புலம்பெயர்ந்தோரைப் பெற்றுள்ளன, இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட 80 சதவீதம் அதிகமாகும் என்று தரவு காட்டுகிறது. செனகல் மற்றும் பிற […]

ஐரோப்பா செய்தி

பெல்ஜியம்-பிரஸ்ஸல்ஸில் இரண்டு ஸ்வீடன் நாட்டவர் சுட்டுக் கொலை

  • October 16, 2023
  • 0 Comments

பிரஸ்ஸல்ஸில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பெல்ஜிய செய்தித்தாள் தெரிவித்துள்ளது. அவர்கள் இரண்டு கால்பந்து ஆதரவாளர்களாக இருக்கலாம் என்று செய்தித்தாள் கூறியது. பெல்ஜிய தலைநகரின் மையப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதை பொலிஸ் பேச்சாளர் உறுதிப்படுத்தினார் ஆனால் மேலதிக விபரங்களை வழங்க மறுத்துவிட்டார். வழக்கைக் கையாளும் பிரஸ்ஸல்ஸ் வழக்குரைஞர்களின் செய்தித் தொடர்பாளர், பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய எந்த விவரங்களையும் அல்லது சாத்தியமான நோக்கத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இலங்கை செய்தி

யாழில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மனைவி!!! கணவன் கொடுத்த பகீர் வாக்குமூலம்

  • October 16, 2023
  • 0 Comments

மனைவி தவறான தொடர்பை தனது சகோதரருடன் வைத்திருந்ததை அறிந்து ஆத்திரமுற்றதாலேயே இருவரையும் தாக்கினேன் என நாவற்குழியில் கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்றபோது கைதான சந்தேக நபர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – நாவற்குழி ஐயனார் கோயிலடியில் இளம் தாயொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று (16) காலை சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் வீட்டில் கணவனை காணாத நிலையில் பொலிஸாரின் சந்தேகம் வலுத்தது. குடும்ப தகராறில் கணவரால் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதிய பொலிஸார் […]

உலகம் செய்தி

முஸ்லிம்கள் என்பதற்காக இருவரை குத்திக் கொலைசெய்த முதியவர்

  • October 16, 2023
  • 0 Comments

71 வயதான ஜோசப் சுபா, முஸ்லிம்கள் என்பதற்காக இருவரைக் கத்தியால் குத்திக் கொலைசெய்துள்ளார், அவர் மீது கொலை மற்றும் வெறுப்புக் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இலினொய்ஸ் மாகாணத்தில் உள்ள ப்ளைன்ஃபீல்டில் வசித்து வந்த ஆறு வயது சிறுவனைக் கொன்றது மற்றும் 32 வயதுடைய பெண்ணைக் காயப்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் முஸ்லிம்கள் என தெரியவந்துள்ளதாகவும், ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாகவே இவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் எனவும் […]

உலகம் செய்தி

காங்கோ படகு விபத்தில் 40 பேர் பலி!!! 167 பேர் மாயம்

  • October 16, 2023
  • 0 Comments

காங்கோவில் படகு கவிழ்ந்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் மேலும் 167 பேர் காணாமல் போயுள்ளதாகவும், தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கோ ஆற்றில் ஏற்பட்ட இந்த விபத்தில் 189 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தின் போது படகில் 300க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாகவும், அதில் பொருட்கள் ஏற்றப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காங்கோவில் படகுகள் ஒரு பொதுவான போக்குவரத்து முறையாகும். அதிக […]

இலங்கை செய்தி

கிளிநொச்சியில் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை

  • October 16, 2023
  • 0 Comments

கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபரந்தன்12 ஏக்கர் பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய இரண்டு மாணவிகள் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 17 வயதுடைய இரண்டு சிறுமிகளும் தம்மால் இந்த பூமியில் வாழ முடியாது என தெரிவித்து தமது இறப்புக்கு காரணம் தாங்களே என கடிதம் ஒன்றை எழுதி […]

செய்தி விளையாட்டு

2028ல் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இணைப்பு

  • October 16, 2023
  • 0 Comments

2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டையும் சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) முடிவு செய்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகி 100 வருடங்களின் பின்னர் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். சர்வதேச கிரிக்கெட் பேரவை இது குறித்து இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்து தேவையான பரிந்துரைகளை வழங்கியது. பின்னர், மும்பையில் நடைபெற்ற அமர்வுக்குப் பிறகு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இந்த முடிவுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கை செய்தி

இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் அபாயம்

  • October 16, 2023
  • 0 Comments

மீண்டு வரும் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் அல்லது ஸ்தம்பித்துவிடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் திரு.பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த யுத்தம் காரணமாக அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் உலக சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை நூறு டொலர்களாக உயரலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் காரணமாக ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை ஏற்கனவே ஐந்து டொலர்களால் அதிகரித்துள்ளது. […]

ஆசியா செய்தி

லஞ்சம் வாங்கிய சீன வங்கியின் முன்னாள் தலைவர் கைது

  • October 16, 2023
  • 0 Comments

லஞ்சம் மற்றும் சட்டவிரோத கடன்களை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் சீன வங்கியின் முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2019 முதல் 2023 வரை அரசுக்கு சொந்தமான வங்கியின் தலைவராக இருந்த லியு லியாங்கே, இந்த ஆண்டு மார்ச் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். சில வாரங்களுக்குப் பிறகு, லியு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாக அதிகாரிகள் அறிவித்தனர். 62 வயதான அவர், சீனாவின் $60 டிரில்லியன் (49 டிரில்லியன் பவுண்டுகள்) நிதித் துறையில் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் […]