இலங்கை

இலங்கையில் இரு வேறு பகுதிகளில் இராணுவ சிப்பாய்கள் உயிரிழப்பு!

  • February 16, 2024
  • 0 Comments

இலங்கையின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில்  இரு இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (15.02) மாலை பறையனாலங்குளம் பெரியகட்டு பகுதியில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற 26 வயதுடைய இராணுவ சிப்பாய் நீரில் மூழ்கிய நிலையில், செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இவர் உடமைலபிட்டிய தலத்துஓயா முகவரியில் வசிக்கும் இராணுவ வீரராவார். அதேபோல் பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி 35 வயதான கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கி […]

ஐரோப்பா

ரஷ்ய ஏவுகணை வெடித்து சிதறியதால் ஏற்பட்ட இராட்சத பள்ளம்

  • February 16, 2024
  • 0 Comments

ரஷ்ய ஏவுகணை வெடித்து சிதறியதால் இராட்சத பள்ளம் ஏற்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. உக்ரைன் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ஏவுகணையே இவ்வாறு வெடித்து சிதறியுள்ளது. புச்சா மாவட்டம் நோக்கி ஏவப்பட்ட அந்த ஏவுகணையை உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தின. வனப்பகுதியில் விழுந்து ஏவுகணை வெடித்து ஏற்பட்ட அதிர்வலைகளால் அருகிலுள்ள கிராமத்தில் சில குடியிருப்புகள் சேதமடைந்தன. அங்கு வசித்தவர்கள் சிலர் வெடிபொருட்கள் பட்டு காயமடைந்தனர்.

உலகம்

பிரேசிலில் சிறையில் இருந்து கைதிகள் தப்பியோட்டம்!

  • February 16, 2024
  • 0 Comments

வடகிழக்கு பிரேசிலில் உள்ள அதிகபட்ச பாதுகாப்பு சிறையிலிருந்து இரண்டு கைதிகள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மொசோரோ நகரில் உள்ள கூட்டாட்சி சிறைச்சாலையில் இருந்து அவர்கள் தப்பியோடிள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை தேடும் பணியில் 300 பாதுகாப்பு முகவர்கள் ஈடுபட்டுள்ளதாக நீதி அமைச்சர் ரிக்கார்டோ லெவன்டோவ்ஸ்கி தெரிவித்தார். இரண்டு கைதிகளும் ஒரு பெரிய பிரேசிலிய குற்றக் கும்பலுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மொசோரோவின் சிறைச்சாலையின் உயர்மட்ட நிர்வாகம் அகற்றப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசால் அனுப்பப்பட்ட இடைக்கால நிர்வாகி தற்போது சிறைச்சாலையின் பொறுப்பில் இருப்பதாகவும், […]

செய்தி

ஆஸ்திரேலியாவில் தனிமையில் வாடும் இளைஞர்கள்!

  • February 16, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான இளைஞர்கள் தனிமையை அனுபவிப்பதாக மெல்போர்னில் உள்ள பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கணக்கெடுப்பு அறிக்கைகளின்படி, இளம் ஆஸ்திரேலியர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் பழைய தலைமுறையினரிடமிருந்து அதிகளவில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அதன்படி, முதியவர்களிடம் தனிமையின்மை காணப்படுவதாகவும், அதே வேளையில் இளைஞர்களின் தனிமை சமூகப் பிரச்சினையாக உருவெடுக்கும் எனவும் அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக, அதிகரித்து வரும் வீட்டுச் செலவுகள் மற்றும் பொருளாதாரச் சிரமங்கள் இளைஞர்களை தனிமையில் தாக்குவதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. 15 முதல் 24 வயதுக்குட்பட்ட ஆஸ்திரேலியர்கள் […]

உலகம்

மெக்ஸிகோவில் நெடுஞ்சாலைகளில் இடம்பெறும் கொலை, கொள்ளைகளை எதிர்த்து போராட்டம்!

  • February 16, 2024
  • 0 Comments

நெடுஞ்சாலை கொள்ளைகளின் போது ஓட்டுநர்கள் கொல்லப்படுவதை எதிர்த்து மெக்ஸிகோ நகருக்கு வெளியே நெடுஞ்சாலைகளில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக சில இடங்களில் போக்குவரத்துகள் தாமதமாகியதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. அரசாங்கம் நெடுஞ்சாலை ரோந்துப் பணிகளை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியே மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மத்திய மெக்சிகோவில் நெடுஞ்சாலைகளில் நீண்ட காலமாக ட்ரக்குகளை திருடர்கள் கடத்திச் சென்றுள்ளனர். இதன்போது பொருட்கள் மாத்திரம் தான் கொள்ளையிடப்பட்டது. ட்ரக்குகளை அவ்விடத்திலேயே விட்டுச் சென்றனர். ஆனால் தற்போது டிரைவர்களைக் […]

இலங்கை

இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையில் நேரடி விமான போக்குவரத்து!

  • February 16, 2024
  • 0 Comments

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கைப் பணியாளர்களைத் திருப்பி அனுப்புவதில் ஏற்படும் தாமதத்தைத் தடுப்பதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கொழும்பு துறைமுகம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது, ​​அதன் விரிவாக்கங்களும் அமுல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அறிந்திருக்க வேண்டியவை

2025ஆம் ஆண்டுக்குள் பனிப்பாறைகள் உருகும் அபாயம் – உலக மக்களுக்கு ஆபத்து

  • February 16, 2024
  • 0 Comments

2025-ஆம் ஆண்டுக்குள் பனிப்பாறைகள் உருகி வளைகுடா ஓடையில் இருந்து கடல் நீரோட்டம் தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் பாதிப்புகள் உருவாகக் கூடும் என்று சுற்றுச்சூழல் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட அட்லாண்டிக் பிராந்தியத்தில் தட்ப வெப்பத்தை சீராக வைத்திருப்பதில் வளைகுடா ஓடை முக்கிய பங்காற்றுகின்றது. இந்த நிலையில், அதில் பாதிப்பு ஏற்பட்டால் வடக்கு அமெரிக்கா, ஆசியாவின் சில பகுதிகள் மற்றும் ஐரோப்பாவில் ஒரு சில தசாப்தங்களுக்குள் 10 டிகிரி வரை வெப்பம் குறையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. […]

அறிவியல் & தொழில்நுட்பம்

திடீரென உச்சம் தொட்ட பிட்கோயின்!

  • February 16, 2024
  • 0 Comments

கடந்த இரண்டு வருடங்களாக மந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடந்த பிட்காயின் விலை திடீரென கிடுகிடுவென உயர்ந்து 50000 டாலர்களை எட்டியுள்ளது. இதற்கு என்ன காரணம் தெரியுமா? தொழில்நுட்பத் துறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்த விஷயங்களில் கிரிப்டோ கரன்சிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் குறிப்பாக பிட்காயின் என்ற ஒன்று வந்த பிறகுதான், கிரிப்டோ கரன்சி சந்தை சூடுபிடிக்க ஆரம்பித்தது. இதைத்தொடர்ந்து பல எழுச்சி மற்றும் வீழ்ச்சிகளை இந்த சந்தை கண்டுள்ளது. 2022ல் கிரிப்டோ கரன்சி […]

உலகம்

கனடாவின் Montreal நகரில் கத்திக்குத்து தாக்குதல் : இருவர் உயிரிழப்பு!

  • February 16, 2024
  • 0 Comments

கனடாவின் நகரமான மாண்ட்ரீலுக்கு மேற்கே உள்ள காண்டோமினியம் கோபுரத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் மற்றும் மற்றொருவர் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கியூபெக் மாகாணத்தில் உள்ள Vaudreuil-Dorion பகுதியில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேகநபர்   கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அவர் தற்போது ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். கொலைசெய்யப்பட்ட நபர்களுக்கும், சந்கேகநபருக்குமான தொடர்பு குறித்த விவரங்களை பொலிஸ் அதிகாரிகள் வெளியிடவில்லை. இருப்பினும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் […]

ஆசியா

சிங்கப்பூரில் குடியுரிமை பெறுவதற்காக திருமணம் செய்துக் கொள்ளும் மக்கள்

  • February 16, 2024
  • 0 Comments

சிங்கப்பூர் குடியுரிமை பெறுவதற்காக திருமணம் செய்துக் கொள்ளும் நடைமுறை  அதிகரித்துள்ளது. இது தொடர்பான குற்றங்களுக்காக 8 வெளிநாட்டவர்கள் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். இந்த குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2023 இல் 8 ஆக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் அது 9 ஆக இருந்தது. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்கையில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்துள்ளது. சிங்கப்பூரில் குடிநுழைவு வசதிகளைப் பெறுவதற்காக சிங்கப்பூரர்களுடன் திருமண ஏற்பாடுகளில் ஈடுபடும் வெளிநாட்டினர் […]