செய்தி

ஜெலென்ஸ்கி ரஷ்யா வந்தால் 100 சதவீதம் பாதுகாப்பை உறுதி செய்வதாக புட்டின் அறிவிப்பு

  • September 6, 2025
  • 0 Comments

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் பேச்சுவார்த்தைக்காக மொஸ்கோ வந்தால், பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்வதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், கூறியுள்ளார். கிழக்குப் பொருளாதார மன்றத்தில் பேசிய அவர், ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மாஸ்கோ சிறந்த இடம் என்று கூறினார். இருப்பினும், பேச்சுவார்த்தைகள் எப்போதாவது ஒரு அமைதி ஒப்பந்தத்திற்கு வழிவகுக்குமா என்பது குறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாக அவர் கூறினார். வேறொரு நாட்டில் பேச்சுவார்த்தை நடத்துவதை புட்டின் நிராகரித்துள்ளார். அதற்கு ரஷ்ய […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் சீன கார் விற்பனையில் புதிய புரட்சி

  • September 6, 2025
  • 0 Comments

கடந்த மாதத்தில் ஆஸ்திரேலியாவில் சீன கார் விற்பனை அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலிய கார் சந்தை தரவுகளின்படி, BYD / GWM / MG மற்றும் Chery Top ஆகியவை முதல் முறையாக முதல் 10 விற்பனை பட்டியலில் இடம்பிடித்துள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 20,000க்கும் மேற்பட்ட சீன தயாரிப்பு கார்கள் விற்பனை செய்யப்பட்டன, இது கடந்த ஆண்டை விட 67% அதிகம். 2035 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலிய வாகனங்களில் 43% சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் போயிங் நிறுவனத்தைச் சேர்ந்த 3,200 பேர் வேலைநிறுத்தம்

  • September 6, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் போயிங் விமான நிறுவனத்தைச் சேர்ந்த 3,200 தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள மிசௌரி மற்றும் இல்லினாய்ஸ் மாகாணங்களில் இந்த வேலை நிறுத்தம் முன்கெடுக்கப்பட்டுள்ளது. ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக ஆகஸ்ட் 4-ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அவர்களுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவர்களுக்குப் பதிலாக நிரந்தர ஊழியர்களை நியமிக்கப்போவதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கை

கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – இளைஞன் பலி

  • September 6, 2025
  • 0 Comments

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று இரவு 11.45 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மஹாவத்தை மணிக்கூண்டு அருகே மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். இறந்தவர் களனியைச் சேர்ந்த 26 வயதுடையவர். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை, மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கு ரிவால்வர் வகை துப்பாக்கி […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய வரவு – சாம்சங் S25 FE

  • September 6, 2025
  • 0 Comments

தொழில்நுட்ப உலகில், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அத்தியாயம் திறந்துகொண்டே இருக்கிறது. பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் புதுப்புது மாடல்களை அறிமுகப்படுத்தி சந்தையை நிரப்பிவிட்டன. செப்டம்பர் மாதத்தில் மேலும் பல போன்கள் வரிசை கட்டி நிற்கின்றன. சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு இரண்டு ‘அன்பேக்டு’ (Unpacked) நிகழ்ச்சிகளை ஏற்கனவே முடித்துவிட்டது. சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை பற்றிய என்னுடைய ஆய்வுகளை நிறைவு செய்த நிலையில், மேலும் ஒரு புதிய தயாரிப்புடன் சாம்சங் நிறுவனம் களமிறங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. […]

விளையாட்டு

விராட் கோலியின் கேப்டன்சி குறித்து யுவராஜ் சிங் தந்தை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

  • September 6, 2025
  • 0 Comments

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், செப்டம்பர் 5, 2025 அன்று இன்சைட் ஸ்போர்ட்ஸ் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், விராட் கோலியின் கேப்டன்ஷி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். விராட் கோலியின் தலைமையில் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டிக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த யோக்ராஜ், “வெற்றி, பணம் மற்றும் புகழ் உள்ள இடத்தில் நண்பர்கள் இருக்க முடியாது என்று நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். எப்போதும் பின்னால் குத்துபவர்கள் (பேக்ஸ்டாபர்ஸ்), […]

இலங்கை

இலங்கையில் பல பகுதிகளில் இன்று உச்சம் கொடுக்கும் சூரியன்

  • September 6, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் […]

உலகம்

நீண்ட நேரம் அமர்வது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் – எச்சரிக்கும் சுகாதார நிபுணர்

  • September 6, 2025
  • 0 Comments

நீண்ட நேரம் ஒரே நிலை அமர்வது குறிப்பாக கால்களை குறுக்காக வைத்திருப்பது, த்ரோம்போசிஸ் எனப்படும் இரத்தக் கட்டிகளை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என சுகாதார நிபுணர் டிரிஸ்டன் ஹல்பர்ட் எச்சரித்துள்ளார். அலுவலகம், வீடு அல்லது ஒன்லைன் கேமிங் அமர்வுகள் என எங்கும் பல மணி நேரம் நகர்வின்றி உட்கார்வது, கால்களில் இரத்த ஓட்டத்தை பாதிக்கும். ஆழ நரம்பு த்ரோம்போசிஸ் மற்றும் நுரையீரல் பாதிப்பு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம் என அவர் கூறினார். இந்த பாதிப்பு ஏற்படுவதனை […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

பல தசாப்தங்களாக வளர்த்தெடுத்த உறவைப் பலவீனப்படுத்தும் டிரம்ப்பின் தன்னிச்சையான வரிகள்

  • September 6, 2025
  • 0 Comments

இந்தியாவுடன் பல தசாப்தங்களாக அமெரிக்கா வளர்த்தெடுத்த உறவைப் பலவீனப்படுத்தும் என அந்நாட்டு மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் கிரிகோரி மீக்ஸ் எச்சரித்துள்ளார். இந்தியா மீது ஜனாதிபதி டிரம்ப் விதித்துள்ள கடும் வரி விதிப்பால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவு விவகாரக் குழுவில் உறுப்பினராக உள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கிரிகோரி மீக்ஸ், டிரம்ப்பின் “தன்னிச்சையான வரிகள்” இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறை பாதித்துள்ளாக தெரிவித்தார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ராவுடனான […]

உலகம் செய்தி

சுந்தர் பிச்சை உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களுக்கு இரவு விருந்து வைத்த டிரம்ப்

  • September 6, 2025
  • 0 Comments

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் மற்றும் மனைவி மெலனியா டிரம்ப், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு விருந்தை வழங்கினர். வெள்ளை மாளிகையில் இந்த சிறப்பு இரவு விருந்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விருந்தில் மெட்டா நிறுவனத்தின் மார்க் ஜுக்கர்பெர்க், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் சிஇஓ சத்யா நாதெல்லா, ஆப்பிள் சிஇஓ டிம் குக், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாம் ஆல்ட்மேன் உள்ளிட்ட தொழில்நுட்பத் துறையின் முக்கியமான தலைவர்கள் பங்கேற்றனர். […]